சீமெந்து மற்றும் கொங்கிரீட்; தயாரிப்பதில் இலங்கைச் சந்தையின் முன்னோடியாகவும், முழுமையாக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த ஒரு நிறுவனமான டோக்கியோ சீமெந்துக் குழுமம் நமது கட்டுமானத் தொழிற்;துறைக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்கி முன்னேற உதவியுள்ளது. இந் நோக்கத்தை அடைய, தொழில்துறையின் பலதரப்பட்ட பங்குதாரர் குழுக்களுடன் கைகோர்த்து செயல்படும் பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளதுடன், அதனூடாக நாம் ஒன்றாக வளர்ச்சியடைகின்றோம்.

எமது தொழில்துறைசார் வலுவூட்டல் திட்டங்கள் நீண்டகால விளைவுகள் மற்றும் அதிக செயற்றிறனை வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பங்குதாரர் குழுக்களுடன் நீண்டகால இணைப்புகளை உருவாக்குவதில் நாங்கள் வெற்றிகரமாக செயற்படுவதுடன்; அறிவு மற்றும் அனுபவப் பகிர்விலும் உயர்தரத்தை அமைத்து நம்பகமான ஆலோசகராகத் திகழ்கின்றோம். கட்டுமானத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் போன்றவற்றில் உயர் உள்ளடக்கத்தை கொண்ட இணைப்புக்களை உருவாக்குவதை எங்கள் முக்கிய பணியாக கருதுகின்றோம்.

எங்கள் அடுத்த தலைமுறை கட்டுமான நிபுணர்களின் புத்தாக்கச் சிந்தனைகள் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நாம் மிகவும் ஆர்வமாக உள்ளதுடன், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகளுடன் பரந்தளவில் பணியாற்றுகின்றோம்.

மேலும், இத்தொழில்துறை வலுவூட்டல் மற்றும் அறிவினைப் பகிர்ந்து கொள்ள இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அனுபவமுள்ள தொழில் வல்லுநர்கள் ,கல்வியாளர்கள் , கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களின் நிபுணத்துவத்தை உள்ளடக்கிய நூதன கட்டுமான இணைப்புத் தளங்களை உருவாக்கியுள்ளோம்.