சமீபத்திய செய்தி வெளியீடுகள்

News Image
டோக்கியோ சீமெந்து குழுமம் மற்றும் Foundation of Goodness: கிரிக்கட் கனவுகளை ஊக்குவிப்பதில் ஒரு தசாப்த கால பூர்த்தி

Photo: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் பயிற்சி அகடமி அனுசரணையை Foundation of Goodness இன் ஸ்தாபகர்/பிரதான காப்பாளர் குஷில் குணசேகரவிடம் கையளிக்கிறார். டோக்கியோ சீமெந்து குழுமம், தொடர்ச்சியான 10ஆவது வருடமாகவும் கிரிக்கட் பயிற்சி முகாம்களுக்கு அனுசரணை வழங்க Foundation of Goodness (FoG) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த பத்தாண்டு கால பங்காண்மையினூடாக, பின்தங்கிய பிரதேசங்களின் நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவ மாணவியருக்கு

Photo: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் பயிற்சி அகடமி அனுசரணையை Foundation of Goodness இன் ஸ்தாபகர்/பிரதான காப்பாளர் குஷில் குணசேகரவிடம் கையளிக்கிறார். டோக்கியோ சீமெந்து குழுமம், தொடர்ச்சியான 10ஆவது வருடமாகவும் கிரிக்கட் பயிற்சி முகாம்களுக்கு அனுசரணை வழங்க Foundation of Goodness (FoG) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த பத்தாண்டு கால பங்காண்மையினூடாக, பின்தங்கிய பிரதேசங்களின் நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவ மாணவியருக்கு பிரதேச, தேசிய மட்டத்திற்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருந்தது. இந்த ஆண்டின் அனுசரணையினூடாக, வட பிராந்திய பயிற்சி முகாமில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு, அப்பிரதேசத்திலிருக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு தமது கிரிக்கட் கனவுகளை நோக்கி பயணிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் பத்து ஆண்டு கால வரலாற்றில், டோக்கியோ சிமென்ட் குழுமம் மற்றும் Foundation of Goodness ஆகியவற்றுக்கு இடையேயான இந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டாண்மை, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த 23 திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் இலங்கை தேசிய அணிகளில் இடங்களைப் பெற்றுள்ளனர். இன்றுவரை, வடக்கில் இருந்து கிட்டத்தட்ட 4,200 சிறுவர்களும் மற்றும் தெற்கு கிராமங்களில் உள்ள 35 கிராமங்களில் உள்ள எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த 3,780 சிறுவர்களும், தொழில்முறைப் பயிற்சியாளர்களால் நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களால் பயனடைந்துள்ளனர். இதில் இலங்கையின் பெண்கள் தேசிய அணியில் அடங்கியுள்ள நட்சத்திர வீராங்கனைகளான கவீஷா தில்ஹாரி, சச்சினி நிசன்சலா, இமேஷா துலானி, காவ்யா கவிந்தி, உமாஷா திமீஷானி, நிலக்சனா சந்தமினி, சத்யா சந்தீபனி, சச்சினி கிம்ஹானி மற்றும் பலரும் அடங்கியுள்ளதுடன், மகளிர் T20 ஆசிய கிண்ணம் 2024 ஐ வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். FOG கிரிக்கட் அகடமி, இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி நட்சத்திரங்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், நவோத் பரணவிதான, மல்ஷ தருபதி, ஹரேன் வீரசிங்க மற்றும் எஸ். மதுஷன் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. இது டோக்கியோ சீமெந்து – Foundation of Goodness கிரிக்கட் பயிற்சி அகடமி ஆகியவற்றினால் ஏற்படுத்தப்பட்ட உறுதியான அடித்தளத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. 2025 செப்டெம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு விஜயம் செய்ய தெரிவாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் தெரிவாகியிருந்த ஹார்ட்லி கல்லூரியின் வி.ஆகாஷ் மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் கே. முதுலன் இந்த ஆண்டின் முயற்சிகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், வட பிராந்திய கிரிக்கட் முகாம் ஹார்ட்லி கல்லூரியின் வி. ஆகாஷ் மற்றும் யாழ்ப்பாணம். சென் ஜோன்ஸ் கல்லூரியின் கே. முதுலன் ஆகியோர் 2025 செப்டெம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கான இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய குழாமில் தெரிவு செய்யப்பட்டிருந்தமையை பெருமையுடன் கொண்டாடியிருந்தது. மேலும், தென் பயிற்சி முகாம், ரத்கம தேவபதிராஜா கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட அணியினரின் சிறந்த திறமைகளை கொண்டாடியது. 2024/25 MCC Lord’s Scholarship பெற்றவரும் வளர்ந்து வரும் நட்சத்திரமுமான அரோஷ சித்துமினவின் தலைமையில், கொழும்பில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை காலிறுதிப் போட்டியில் அவர் அணி 150 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழிகோலியிருந்தார். அதன் பின்னர், அணி 17 வயதுக்குட்பட்டோருக்கான ‘A’ பிரிவு சம்பியன்ஷிப்பை வென்றது. இந்த வெற்றியுடன், அவர்களின் 13 வயதுக்குட்பட்டோர் அணி இணைச் சம்பியனானது, அத்துடன் 15 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. இதன் மூலம், ரத்கம தேவபதிராஜா கல்லூரி ஒரே பருவத்தில் நான்கு தேசிய இறுதிப் போட்டிகளை எட்டியதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், ஹிக்கடுவையில் உள்ள MCC வசதி மையமானது சம்பியன்களை உருவாக்கியுள்ளது. அங்கு ஸ்ரீ சுமங்கல கல்லூரி 16 தொடர்ச்சியான போட்டிகளில் வென்று, 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டு நாள் மற்றும் ஒரு நாள் பிரிவு 3 பட்டங்கள் இரண்டையும் கைப்பற்றியது. இது ஒரு வரலாற்றுப் பாடசாலைச் சாதனையாகும், மேலும் அவர்கள் பிரிவு 2-க்குத் தகுதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற டோக்கியோ சீமெந்து வடக்கு கிரிக்கட் முகாமின் அமர்வுகளின் காட்சிகள் டோக்கியோ சீமெந்து- Foundation of Goodness கிரிக்கட் பயிற்சி அகடமி, 2014 ஆம் ஆண்டில் ஹிக்கடுவை மற்றும் சீனிகமவில் இரண்டு முழுமையாக வசதியளிக்கப்பட்ட உயர்தர பயிற்சி மைதானங்களை அமைத்ததன் மூலம் தொடங்கப்பட்டது. தெற்கில் பெற்ற வெற்றியானது, 50 நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை நட்சத்திரத் தரத்திலான இலங்கை கிரிக்கெட் வீரர்களாகப் பயிற்றுவிக்கும் இலக்குடன், 2017 ஆம் ஆண்டில் வடக்குப் பகுதிக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த டோக்கியோ சீமெந்தைத் தூண்டியது. வடக்கில் நடைபெறும் பயிற்சி முகாம்கள் மிகுந்த உற்சாக வரவேற்பைப் பெற்றன. இது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் உள்ள அனைத்து வயதுப் பிரிவுகளிலிருந்தும் பல பாடசாலை மாணவி மற்றும் மாணவர் கிரிக்கெட் வீரர்களை ஈர்த்துள்ளது. இவர்கள் தேசிய பட்டங்கள் முதல் சர்வதேச அங்கீகாரம் வரை குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற டோக்கியோ சீமெந்து வடக்கு கிரிக்கட் முகாமின் மேலும் சில காட்சிகள் Foundation of Goodness இன் விளையாட்டுப் பணிப்பாளர் அனுர டி சில்வாவின் தலைமையில், புகழ்பெற்ற பயிற்றுனர்களான ஹேமந்த தேவப்பிரிய மற்றும் சுசந்த கருணாரத்ன ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, இந்த அகடமி இளம் திறமையாளர்களுக்குத் திறன்மிக்க பயிற்சி மற்றும் வசதிகளை அணுக வாய்ப்பளிப்பதன் மூலம் ஆரம்ப மட்டத்திலேயே அவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலதிகமாக, மாவட்ட மற்றும் பாடசாலை மட்டப் பயிற்றுனர்கள், நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களின் திறன்களை மெருகூட்டவும், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் திறன்மிக்க வீரர்கள் குழாமில் அவர்களை உள்வாங்கவும் ஆதரவளிக்கின்றனர். சீனிகம Surrey Oval இல் டோக்கியோ சீமெந்து தெற்கு கிரிக்கட் முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன டோக்கியோ சீமெந்து – Foundation of Goodness கூட்டாண்மையின் இந்த 10 ஆண்டு மைல்கல்லானது, சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கிராமப்புறத்தைச் சேர்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களின் புதிய தலைமுறையினரின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் பெருமையை சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு எடுத்துச் செல்லக்கூடியவர்களாக தயார்ப்படுத்தப்படுகின்றனர்.

News Image
ஜப்பானிய தூதுவர் டோக்கியோ சீமெந்து திருகோணமலை தொழிற்சாலைக்கு விஜயம்

திருகோணமலை, செப்டெம்பர் 6, 2025 – இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடா, டோக்கியோ சீமெந்து திருகோணமலை தொழிற்சாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொருளாதார உறவுகள் மற்றும் நீண்ட கால நட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது. தூதுவருடன், நிதிசார் இணைப்பாளர் யுகாகோ மிசுனுமா மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சச்சி டனாகா ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவில் ஒரு மில்லியன்

திருகோணமலை, செப்டெம்பர் 6, 2025 – இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடா, டோக்கியோ சீமெந்து திருகோணமலை தொழிற்சாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொருளாதார உறவுகள் மற்றும் நீண்ட கால நட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது. தூதுவருடன், நிதிசார் இணைப்பாளர் யுகாகோ மிசுனுமா மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சச்சி டனாகா ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவில் ஒரு மில்லியன் மெட்ரிக் டொன்களை மேலதிகமாக சேர்த்திருந்த, பிந்திய விரிவாக்க செயற்திட்டம் குறித்தக விளக்கங்கள் இந்த விஜயத்தின் போது வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் பொருளாதார விரிவாக்கம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தியில் வலுவூட்டும் மைல்கல்லாக இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து சிறப்பு நிலையத்தில், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் மற்றும் டோக்கியோ சீமெந்தின் தொழினுட்ப பங்காளர் மிட்சுபிஷி UBE சீமெந்து கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் மிச்சியோ மட்சொகா ஆகியோர் தூதுக்குழுவினரை வரவேற்றதுடன், தொழிற்சாலையினுள் விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீமெந்து ஆலை, திருகோணமலை துறைமுகத்தில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து ஜெட்டி மற்றும் ஏ.வை.எஸ். ஞானம் கிராமம் இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையம் ஆகியவற்றுக்கான விஜயங்கள் இதில் அடங்கியிருந்ததுடன், சமூக-பொருளாதார அபிவிருத்தியில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலித்திருந்தது. நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான பங்காண்மையின் அடையாளமாக டோக்கியோ சீமெந்து திகழ்வதுடன், தொழிற்துறை வளர்ச்சியை பிரதிபலிப்பது மட்டுமன்றி, நிலைபேறான அபிவிருத்திக்கான பகிரப்பட்ட நோக்கையும் வெளிப்படுத்திய வண்ணமுள்ளது. உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் உற்பத்தியில் இலங்கையின் மாபெரும் செயற்பாட்டாளராக திகழும் டோக்கியோ சீமெந்து, நிர்மாணத் துறையில் நம்பிக்கையை வென்ற விநியோகத்தர் எனும் கீர்த்தி நாமத்தையும் பெற்றுள்ளது. உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தினூடாக தேசிய பொருளாதாரத்துக்கு வலுவூட்டுவதற்கு நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையின் தொழிற்துறை முன்னேற்றத்துக்கும் வலிமை சேர்க்கிறது. தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றுக்கு ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்னோடியான பங்காளராக, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்த செயற்பாட்டாளராகவும் திகழ்கிறது.

News Image
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் ‘Industry-Uni Collaboration Day 2025’ சிவில் பொறியியல் புத்தாக்க நிகழ்வுக்கு அனுசரணை

டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவு கைகோர்த்து, ‘Industry–University Collaboration Day 2025’ நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. கல்விச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை பங்காளர்களுக்கிடையே ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. ஜுலை 28 ஆம் திகதி இரத்மலான, நீர் மற்றும் துப்புரவுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி

டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவு கைகோர்த்து, ‘Industry–University Collaboration Day 2025’ நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. கல்விச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை பங்காளர்களுக்கிடையே ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. ஜுலை 28 ஆம் திகதி இரத்மலான, நீர் மற்றும் துப்புரவுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய கலந்து கொண்டார். இதர விருந்தினர்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். லிலந்த சமரநாயக்க மற்றும் சிவில் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரி பேராசிரியர். குஷான் விஜேசுந்தர, சிரேஷ்ட பீட அங்கத்தவர்கள், புகழ்பெற்ற தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் கடந்த கால மற்றும் தற்போது பயிலும் பட்டதாரி மாணவர்கள் போன்றவர்களும் அடங்கியிருந்தனர். பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரிய தமது விசேட உரையின் போது, சர்வதேச நியமங்களுக்கு பொருந்தும் வகையில் STEM கல்வியை ஊக்குவிக்க, கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவம், தொழிற்துறையை மேம்படுத்தி, அவசியமான அபிவிருத்தி இலக்குகளை நிவர்த்தி செய்வதற்கு பல்கலைக்கழக ஆய்வின் நிலைப்பாடு மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்கு சமத்துவமான கல்வி வாய்ப்புகளின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இணைந்த பணிகள், நிஜ உலக பிரச்சனைகளை தீர்க்கும் திறன்களைக் கொண்ட மற்றும் தொழிற்துறையில் செயலாற்றக்கூடிய பட்டதாரிகளை தயார்ப்படுத்துகின்றமைக்காக பல்கலைக்கழகத்தின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டுதல்களை தெரிவித்திருந்தார். பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவின் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்கள், தமது புத்தாக்கமான தீர்வுகளை நிகழ்வில் வெளிப்படுத்துவதை காணலாம். பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் இந்த வருடாந்த நிகழ்வின் போது, சிவில் பொறியியல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் படைத்த பட்டதாரி மாணவர்களின் ஆய்வு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பிரத்தியேகமான சிந்தனைகள் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றினூடாக தற்போதைய பொறியியல் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய யோசனைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய கட்டமைப்பாக அமைந்திருந்தது. அரசாங்கம், அரச அதிகார அமைப்புகள், ஆய்வு நிலையங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பொறியியல் மாணவர்கள் போன்ற பல தரப்பினரை ஒன்றிணைத்து, உறுதியான தொழிற்துறைசார்-கல்விக் கட்டமைப்பு கைகோர்ப்பை ஊக்குவித்திருந்தது. சிவில் பொறியியலின் முழுமையான நிரலில் கட்டமைப்பு, புவியியல் தொழினுட்பம், போக்குவரத்து, நீர் வளங்கள் மற்றும் சூழல் பொறியியல், நிகழ்வில் உள்ளடக்கப்பட்ட போஸ்டர் கண்காட்சிகள், வாய்மூல விளக்கங்கள் மற்றும் கல்வி-தொழிற்துறைசார் பங்காண்மைகளின் நேர்வு பற்றிய ஆய்வுகள் போன்றன அடங்கியிருந்தன. இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, மாணவர்கள் இரண்டு நிமிடங்களினுள் தமது ஆய்வுத் திட்டங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்களை வழங்கியிருந்தனர். துரிதமான விளக்கக்காட்சிகள் நடைமுறை பொறியியல் தீர்வுகளை வலியுறுத்தின, மாணவர்களுக்கு நிஜ உலகத் தேவைகளுடன் இணைந்த துறையின் அதிநவீன ஆராய்ச்சி திறன்களை முன்னிலைப்படுத்த வாய்ப்பளித்தன. மேலும், சிவில் பொறியியல் பிரிவின் பீட அங்கத்தவர்களால் ஆழமான தொழிற்துறை ஈடுபாட்டுக்கான வாய்ப்புகளை வழங்கியிருந்ததுடன், மாணவர்கள், கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் மத்தியில் அர்த்தமுள்ள உரையாடலுக்கு வழிகோலியிருந்தன. சிவில் பொறியியல் பிரிவுடன் நீண்ட காலமாக டோக்கியோ சீமெந்து குழுமம் பேணும் பங்காண்மையை மேலும் தொடரும் வண்ணம், ‘Industry-University Collaboration Day 2025,’ இன் ஏக அனுசரணையாளராக இணைந்து வழங்கியிருந்த பங்களிப்பினூடாக, தொழிற்துறை தலைவர்களை எதிர்கால பொறியியலாளர்களாக தயார்ப்படுத்துவது மற்றும் பிரயோக ஆய்வை மேம்படுத்துவது போன்றவற்றை கவனம் செலுத்தியிருந்தது. டோக்கியோ சீமெந்தின் நவீன வசதிகள் படைத்த ஆய்வு மற்றும் விருத்தி ஹப் பகுதியான Construction Research Centre (CRC) க்கு, சீமெந்து மற்றும் கொங்கிரீட் போன்றவற்றில் புத்தாக்கங்களை வெளிப்படுத்த இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்திருந்தது. அதனூடாக மேம்படுத்தப்பட்ட, நிலைபேறான நிர்மாணத் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள தலைமைத்துவம் மேலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்துடன் கொண்டுள்ள நீண்ட கால பிணைப்பை இந்த நிகழ்வு மேலும் மேம்படுத்தியிருந்ததுடன், உலகத் தரம் வாய்ந்த அறிவு பகிர்வை மேற்கொண்டு, உள்நாட்டு நிர்மாணத்துறையை முன்னேற்றுவதை ஊக்குவிப்பதில் குழுமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

News Image
டோக்கியோ சீமெந்து திருகோணமலையில் 1 மில்லியன் டொன் ஆலையை நிறுவி தனது கொள்ளளவை மேம்படுத்தியுள்ளது

படங்கள்: தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மிட்சுபிஷி உபே சீமெந்து கோர்பரேஷனின் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரி மசாஹரு சன்சுயி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா ஆகியோர் திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புதிய சீமெந்து அரைக்கும் ஆலையை வைபவ ரீதியில் திறந்து வைக்கின்றனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த சீமெந்து உற்பத்தி ஆலையை திருகோணமலையில், தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அண்மையில்

படங்கள்: தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மிட்சுபிஷி உபே சீமெந்து கோர்பரேஷனின் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரி மசாஹரு சன்சுயி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா ஆகியோர் திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புதிய சீமெந்து அரைக்கும் ஆலையை வைபவ ரீதியில் திறந்து வைக்கின்றனர்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த சீமெந்து உற்பத்தி ஆலையை திருகோணமலையில், தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அண்மையில் திறந்து வைத்தார். முழுமையாக தன்னியக்கமயப்படுத்தப்பட்ட, உயர் தொழினுட்பத்திறன் கொண்ட சீமெந்து அரைக்கும் ஆலையினூடாக, டோக்கியோ சீமெந்தின் மொத்த உற்பத்தி கொள்ளளவில் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சேர்க்கப்பட்டுள்ளது. அதனூடாக, வருடமொன்றில் 4 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து உற்பத்தி மேற்கொள்ளக்கூடிய வசதியை கொண்ட மாபெரும் சீமெந்து உற்பத்தியாளராக திகழ்கிறது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா, ஜப்பானிய தூதரகத்தின் நிதி இணைப்பாளரும் முதல் செயலாளருமான டகாஃபுமி நகாநிஷி, கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோருடன், அரசாங்க அதிகாரிகளும், அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் PC மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், டோக்கியோ சீமெந்தின் தொழினுட்ப பங்காளரான மிட்சுபிஷி உபே சீமெந்து கோர்பரேஷனின் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரி மசாஹரு சன்சுயி ஆகியோரும் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்து கொண்டனர். பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அமைச்சர் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, “டோக்கியோ சீமெந்து ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அவதானிக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தேசத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியிலும் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தை அதிசிறந்த வணிக மையமாக திகழச் செய்யக்கூடிய வாய்ப்பு பல தசாப்த காலப்பகுதிக்கு முன்னரே, மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களால் இனங்காணப்பட்டிருந்தது, இதே நோக்கையே நானும் தொடர்ச்சியாக முன்மொழிந்து வருகிறேன். பொது-தனியார் பங்காண்மைகளினூடாக எய்தக்கூடிய உயர் முன்னேற்றங்களுக்கான, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாகவும் இது அமைந்துள்ளது. அரசாங்கம் எனும் வகையில், இது போன்ற உள்நாட்டு முதலீடுகளுக்கு நாம் எமது ஆதரவை மீள உறுதி செய்வதுடன், தொழிற்துறை விருத்திக்கான முதலீட்டாளர்களுக்கு நட்பான சூழலை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா ஆகியோர் திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புதிய சீமெந்து அரைக்கும் ஆலையிலுள்ள நினைவுச் சின்னத்தை திரைநீக்கம் செய்கின்றனர்.

இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் நவோகி கமோஷிடா கருத்துத் தெரிவிக்கையில், “நாடு முழுவதிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சில ஆண்டுகளுக்குள் டோக்கியோ சீமெந்து வெற்றிகரமாக ஆலை விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதை காண்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் விரிவாக்கம் என்பது காலகட்டத்துக்கு அவசியமானதாக அமைந்திருப்பது மட்டுமன்றி, தொலைநோக்கத்தைக் கொண்டதாகவும் உள்ளது. நிறுவனத்தின் மூலோபாய தொலைநோக்கு என்பது, தேசிய முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கும் என்பதுடன், இந்தப் பிராந்தியத்துக்கும், நாட்டுக்கும் எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். ஜப்பானிய மற்றும் இலங்கையின் வியாபாரங்கள் இணைந்து நிலைபேறான விருத்தி மற்றும் பரஸ்பர சுபீட்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவதற்கு இது தெளிவான உதாரணமாக அமைந்துள்ளது. எமது இரு நாடுகளுக்குமிடையிலான உறுதியான மற்றும் நீண்ட பொருளாதார பந்தத்துக்கான எடுத்துக்காட்டாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது.” என்றார்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் PC, கருத்துத் தெரிவிக்கையில், “இந்த உற்பத்தி ஆலையுடன், எமது உற்பத்தித் திறன் 4 மில்லியன் மெட்ரிக் டொன்களாக அதிகரித்துள்ளது. அதில் நவீன வசதிகள் படைத்த ஐரோப்பிய தொழினுட்பங்கள் முக்கிய பங்காற்றுவதுடன், புத்தாக்கம் மற்றும் சூழலுக்கு நட்பான உற்பத்திக்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக அமைந்துள்ளது. மிக முக்கியமாக, முழு செயற்திட்டமும் எமது உள்ளக பொறியியல் அணியினரால் நிறைவேற்றப்பட்டதுடன், இலங்கையின் ஆற்றலுக்கான சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், எமது நாட்டினுள் பெறுமதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பற்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. இந்த நாற்பதுக்கு அதிகமான ஆண்டுகளில் எமது மூலோபாய முன்னுரிமைகளினூடாக, எமது உள்நாட்டு பெறுமதி சங்கிலியை விரிவாக்கம் செய்வதிலும், எமது நாட்டின் எதிர்காலத்தில் மீள முதலீடு செய்வதிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது. இந்த மைல்கல்லுடன், நிர்மாணத்துறையில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து தயாராக உள்ளதுடன், இறக்குமதிகளுக்காக செலவிடப்படும் பல மில்லியன் டொலர்களை சேமிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.” என்றார்.

உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபடும் இலங்கையின் மாபெரும் உற்பத்தியாளராக டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்கிறது. முற்றிலும் உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், டோக்கியோ சீமெந்து, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் உள்ளக அங்கமாக அமைந்திருப்பதுடன், நிர்மாணத்துறையின் நம்பிக்கையை வென்ற விநியோகத்தராகவும் திகழ்கிறது. பாலங்கள், புகையிரத பாதைகள் மற்றும் உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றன முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் நிர்மாணத்தில் டோக்கியோ சீமெந்து தயாரிப்புகள் முக்கிய பங்காற்றியுள்ளன. தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றில் ஒப்பற்ற அர்ப்பணிப்புடன், நிறுவனம் தொடர்ந்தும் உள்நாட்டு நிர்மாணத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் முன்னோடியாக அமைந்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பிரதான பங்காளர் எனும் வகையில், டோக்கியோ சீமெந்து உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தினூடாக தேசிய பொருளாதாரத்துக்கு வலுவூட்டுவதுடன், தனது சந்தை தலைமைத்துவத்தை வலிமைப்படுத்தி, இலங்கையின் தொழிற்துறை முன்னேற்றத்தின் முக்கிய அடையாளமாகவும் அமைந்துள்ளது.

திருகோணமலையின் சீன குடா பகுதியில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் 1 மில்லியன் மெட்ரிக் டொன் சீமெந்து அரைக்கும் ஆலையின் திறப்பு விழாவின் சில காட்சிகள்.


காப்பகம்

2025JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec