சமீபத்திய செய்தி வெளியீடுகள்
விசேடத்துவமான பயிற்சியளிப்பினூடாக வட பிராந்தியத்தின் கிரிக்கட்டுக்கு வலுவூட்டல்
இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு என்பது தேசத்தை ஒன்றிணைக்கும் நேர்த்தியான பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ளது. தேசத்தை ஒரே அணி, ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, குதூகலமாக, மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யும் விளையாட்டாகவும் அமைந்துள்ளது. தற்போது எமது தேசத்தின் கொடி மீண்டும் உயரப் பறப்பதை காண முழு நாடுமே பலத்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. உலகக் கிரிக்கட்டில் மீண்டும் எமது வெற்றியை சுவைப்பதற்கு, புதிய திறமைசாலிகளை நாம் இனங்காண வேண்டியுள்ளதுடன், அவர்களுக்கு திறன்களை கட்டியெழுப்பிக் கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது. 2014 …
இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு என்பது தேசத்தை ஒன்றிணைக்கும் நேர்த்தியான பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ளது. தேசத்தை ஒரே அணி, ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, குதூகலமாக, மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யும் விளையாட்டாகவும் அமைந்துள்ளது. தற்போது எமது தேசத்தின் கொடி மீண்டும் உயரப் பறப்பதை காண முழு நாடுமே பலத்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. உலகக் கிரிக்கட்டில் மீண்டும் எமது வெற்றியை சுவைப்பதற்கு, புதிய திறமைசாலிகளை நாம் இனங்காண வேண்டியுள்ளதுடன், அவர்களுக்கு திறன்களை கட்டியெழுப்பிக் கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலுமிருந்து இளம் கிரிக்கட் திறமைசாலிகளை இனங்காணும் பயணத்தை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Foundation of Goodness ஆரம்பித்திருந்தது. சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கிரிக்கட் நிபுணர்களின் வழிகாட்டல்களின் கீழ் இளம் வீரர்களுக்கு தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக மாதாந்தம் கிரிக்கட் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளம் திறமையான பாடசாலை கிரிக்கட் வீரர்களுக்கு, விளையாட்டில் தமது கனவை நனவாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது இந்தத் திட்டத்தின் இலக்காகும். Foundation of Goodness இன் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் அமைந்துள்ள சீனிகம மற்றும் ஹிக்கடுவ பகுதிகளில் இந்த மாதாந்த பயிற்சி முகாம் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. புகழ்பெற்ற கிரிக்கட் பயிற்றுவிப்பாளரான ஹேமந்த தேவப்பிரியவினால் இந்த பயிற்சி அமர்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், 13 முதல் 19 வரையான பாடசாலை மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். தென் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கிரிக்கட் முகாம்கள் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டில் வட பிராந்தியத்துக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை டோக்கியோ சீமெந்து வியாபித்திருந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பல இளம் கிரிக்கட் வீரர்களை இந்தத் திட்டம் உள்வாங்கியது. Foundation of Goodness இன் விளையாட்டுப் பணிப்பாளர் அனுர டி சில்வா, இந்தத் திட்டத்துக்கு தலைமைத்துவமளிப்பதுடன், தேசத்துக்கு பெருமை சேர்க்கக்கூடிய 50 வட பிராந்திய இளைஞர்களை தெரிந்து, அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்த்துள்ளார். வட பிராந்தியத்தில் காணப்படும் திறமைகளை இனங்கண்டதன் பின், சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களினால் இலங்கை கிரிக்கட் வலுவூட்டப்பட்டிருந்தது. கிராமியமட்டத்தில் இனங்காணப்படாமல் பல திறமைசாலிகள் காணப்படுகின்றனர். எதிர்காலத்தில் எமது கிரிக்கட் வரலாற்றை செதுக்கக்கூடிய இந்த நட்சத்திரங்களை வெளிக் கொண்டுவருவது எமது எதிர்பார்ப்பாகும்.” என்றார். வட பிராந்தியத்தின் திறமை வெளிப்பாடானது, எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இலங்கையின் கிரிக்கட்டில் வசந்த காலத்தை தோற்றுவிக்கக்கூடிய நம்பிக்கையை வழங்குவதாக அமைந்துள்ளது. கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்துவது தொடர்பில் டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கி வருகின்றது. சமூக மற்றும் புவியியல்சார் இடைவெளியை நிவர்த்தி செய்து, பாலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக கிரிக்கட்டின் உண்மையான கண்ணியத்தன்மை வெளிப்படுத்தப்படும் என்பதில் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. டோக்கியோ சீமெந்தின் மேற்பார்வையின் கீழ் Foundation of Goodness இனால் முன்னெடுக்கப்படும் பயிற்சி முகாம்களினால் இதுவரையில் 1000 க்கும் அதிகமான பாடசாலை மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பல தேசிய மட்ட வீரர்கள் தயார்ப்படுத்தப்பட்டு, உலக கிரிக்கட் அரங்கில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுமுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு பாகத்தையும் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கட்டில் ஒன்றிணைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதனூடாக, சகோதரத்துவத்துக்கான அடித்தளம், மதிப்பளிப்பது தொடர்பான புரிந்துணர்வு போன்றவற்றுக்கான அடித்தளத்தை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிர்மாணத் துறையில் முன்னோடி எனும் வகையில் டோக்கியோ சீமெந்தின் எதிர்பார்ப்பான தேசத்தை கட்டியெழுப்புதல் என்பதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
ஹோர்ட்டன் சமவெளி பகுதியில் வனாந்தரச் செய்கையை ஊக்குவிக்கும் டோக்கியோ சீமெந்து
இலங்கையின் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா, பரந்த புல்வெளிகளையும், வானுயர்ந்த பசுமையான மழைக்காடுகளையும் கொண்டிருக்கின்றமை இயற்கை அதிசயமாக அமைந்துள்ளது. UNESCO உலக பாரம்பரிய பகுதிகளில் ஒன்றான இந்த உயிரியல் பரம்பலை கொண்ட பகுதி, உலகின் வேறெங்கும் காண முடியாத அரிய வகை தாவர மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகவும் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவுக்கான டயாகம நடைச் சுவட்டு பகுதியை, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய ரேஞ்ஜர் அலுவலகத்தை …
இலங்கையின் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா, பரந்த புல்வெளிகளையும், வானுயர்ந்த பசுமையான மழைக்காடுகளையும் கொண்டிருக்கின்றமை இயற்கை அதிசயமாக அமைந்துள்ளது. UNESCO உலக பாரம்பரிய பகுதிகளில் ஒன்றான இந்த உயிரியல் பரம்பலை கொண்ட பகுதி, உலகின் வேறெங்கும் காண முடியாத அரிய வகை தாவர மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகவும் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவுக்கான டயாகம நடைச் சுவட்டு பகுதியை, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய ரேஞ்ஜர் அலுவலகத்தை கையளித்து உரையாற்றுகையில், “எமது நாட்டில் வனாந்தர நீந்தல் கலாசாரத்தின் ஆரம்பமாக இது அமைந்துள்ளது. ஜப்பானியர்களால் தமது வாழ்க்கையை தாவரங்கள் மற்றும் இயற்கையுடன் சங்கமித்து குணமடையும் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஹோர்ட்டன் சமவெளிக்கான மிகவும் காட்சியம்சங்கள் நிறைந்த நடைப் பாதையாக இந்த பகுதியை நான் தனிப்பட்ட ரீதியில் அனுபவித்துள்ளேன். அடர்ந்த வனாந்தரப் பகுதியினூடாக நடந்து செல்கையில் ஒப்பற்ற வனாந்தர நீந்தல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. மலை ஏறுவோர் மற்றும் சைக்கிளோட்டிகளுக்கு பிரத்தியேகமான மலைஏறல் அனுபவத்தை வழங்கும் இந்த பாதையை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா போன்ற இயற்கையான பகுதியில் காணப்படும் விஞ்ஞான ரீதியான பாதுகாப்பு அம்சங்களின் முக்கியத்துவத்தை டோக்கியோ சீமெந்து உணர்ந்திருந்தமையினால் இந்தத் திட்டத்துடன் கைகோர்க்க தீர்மானித்தது. விருந்தினர்களுக்கு நடையாக மலையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே இயற்கை பகுதியாக இது அமைந்துள்ளது. பட்டிபொல அல்லது ஒஹிய பகுதிகளிலிருந்து வாகனங்களில் பல விருந்தினர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்யும் போதிலும், 5 கிலோமீற்றர் தூரமான டயாகம கிழக்கு நடைப்பாதை, இயற்கையை ரசிப்போருக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த மலையேறல் பகுதி, உலகப் புகழ்பெற்ற பெக்கோ வழியின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. இப்பாதையினூடாக பயணிப்போருக்கு வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த பறவை இனங்கள் மற்றும் ஹோர்ட்டன் சமவெளிக்கு மாத்திரம் உரித்துடைய அரிய பறவை இனங்களை கண்டு களிக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார். (இடமிருந்து) டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, காஞ்சன ஜயரட்ன, வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோர் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவில் புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட டயாகம நடை பகுதியை பார்வையிடுகின்றனர். அதிகளவு பிரபல்யமடையாத டயாகம கிழக்கு நுழைவாயில் பகுதி பெரும்பாலும் கண்காணிக்கப்படுவதில்லை. இதனால், அதிகளவு பின்தங்கிய நுழைவு மற்றும் வெளியேறல் பகுதியாக அமைந்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்டளவு வளங்களைக் கொண்டிருந்த நிலையில், இந்த வழியினூடாக விருந்தினர்களின் செயற்பாடுகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை வனஜீவராசிகள் திணைக்களம் நாடியிருந்தது. சூழல்சார் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் டோக்கியோ சீமெந்து குழுமம் புகழ்பெற்றுள்ள நிலையில், ஹோர்ட்டன் சமவெளியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாலும், டயாகம கிழக்கு நடைபாதை நுழைவாயில் பகுதியில் வனஜீவராசிகள் ரேஞ்ஜர் அலுவலகமொன்றை நிறுவுவதில் கைகோர்க்குமாறு டோக்கியோ சீமெந்து குழுமத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களம் அழைப்புவிடுத்திருந்தது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக தொகுதியை, வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் (திருமதி) பவித்ரா வன்னியாரச்சி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார ஆகியோரிடம் கையளித்திருந்தனர். டயாகம நடை பகுதியினூடாக ஹோர்ட்டன் சமவெளியில் பிரத்தியேக வனாந்தர நீந்தல் அனுபவத்தை பெற்றுக் கொள்ள வருகை தருமாறு நிஜ இயற்கை விரும்பிகளை டோக்கியோ சீமெந்து குழுமம் அழைப்புவிடுத்துள்ளது. வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் (திருமதி) பவித்ரா வன்னியாரச்சியின் முயற்சிகளை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி பாராட்டி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த டயாகம விருந்தினர் நுழைவாயில் பகுதி, மலைஏறலில் முற்றிலும் காட்சியம்சங்களை கண்டுகளிக்க எதிர்பார்ப்போருக்கு சிறந்த விருந்தாக அமைந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. சூழல்சார் நிலைபேறாண்மை என்பதற்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சகல விதமான வாகன உட்பிரவேசங்களுக்கும், அனுமதியில்லாத உட்பிரவேசங்களையும் தடை செய்துள்ளதுடன், தற்காலத்துக்கு மாத்திரமன்றி, எதிர்கால தலைமுறைகளுக்காகவும் இந்த பிரத்தியேகமான தாவர மற்றும் விலங்கினங்களை பாதுகாப்பதை உறுதி செய்யும்.” என்றார். புதிய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கான அலுவலகம் நிறுவியமைக்கு மேலதிகமாக, இந்த மலையேறல் பகுதியில் நடைபாதைப் பகுதியில் முக்கியமான இடங்களில் அறிவித்தல் பதாதைகளையும் நிறுவியுள்ளது. இதனூடாக ஹோர்ட்டன் சமவெளி பகுதியில் இனங்காணப்படும் பிரத்தியேகமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. Parrotfish Collective இனால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தகவல் பதாதைகள், பூங்காவின் செழுமையான உயிரியல் பரம்பல் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதாக அமைந்திருப்பதுடன், அதனை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விருந்தினர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தூர நோக்குடைய இந்த இயற்கை பாதுகாப்பு திட்டத்தினூடாக ஹோர்ட்டன் சமவெளி பகுதிக்கு விஜயம் செய்யும் விருந்தினர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.- Photo: டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி ஆகியோர் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா டயாகம வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள ரேஞ்ஜர் அலுவலகத்தை அங்குரார்ப்பணம் செய்வதை காணலாம்.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் 2023 ஆம் ஆண்டின் விநியோகத்தர் மாநாட்டின் போது பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் 2023 ஆம் ஆண்டின், வருடாந்த சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகத்தர் கௌரவிப்பு மாநாடு இரு கட்டங்களாக சினமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது, சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகத்தர்களை, சூரியன் அஸ்தமிக்கும் இனிய மாலைப் பொழுதில், கொழும்பு Port City Marina பகுதியில், கட்டுமரத்தில் அழைத்துச் சென்று, கொழும்பு நகரின் வானுயர்ந்த கட்டடங்களின் அழகை ரசித்து மகிழும் வாய்ப்பை நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விநியோகப் பங்காளர்களுக்கான மகிழ்ச்சியூட்டும் வகையிலான …
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் 2023 ஆம் ஆண்டின், வருடாந்த சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகத்தர் கௌரவிப்பு மாநாடு இரு கட்டங்களாக சினமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது, சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகத்தர்களை, சூரியன் அஸ்தமிக்கும் இனிய மாலைப் பொழுதில், கொழும்பு Port City Marina பகுதியில், கட்டுமரத்தில் அழைத்துச் சென்று, கொழும்பு நகரின் வானுயர்ந்த கட்டடங்களின் அழகை ரசித்து மகிழும் வாய்ப்பை நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விநியோகப் பங்காளர்களுக்கான மகிழ்ச்சியூட்டும் வகையிலான நிகழ்வுகளுடன், விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
சிட்டி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்டோர்ஸ் – யாழ்ப்பாணம்
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் 2023 விநியோகத்தர் மாநாட்டில், பத்து பிரிவுகளில் 162 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் சிறந்த செயற்பாட்டாளர்களாக யாழ்ப்பாணம் – சிட்டி ஹாட்வெயார் அன்ட் ஸ்டோர்ஸ், மட்டக்களப்பு – ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹாட்வெயார் டீலர், குருநாகல் – நஷனல் டிரேடிங் ஸ்டோர்ஸ், கிளிநொச்சி – சண்முகம் ஸ்டோர்ஸ் மற்றும் உடுப்பிட்டி- எமரல்ட் ஹாட்வெயார் போன்றன கௌரவிக்கப்பட்டிருந்தன. டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பில்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஆர். ஞானம், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். தயானந்தன், பணிப்பாளர் ஆலோசகர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ, குழும சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் தஷந்த உடவத்த மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் பில்லி வல்பொல ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது. நாடு முழுவதையும் சேர்ந்த டோக்கியோ சீமெந்து விநியோகத்தர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து, முன்னைய ஆண்டில் அவர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் டீலர் – மட்டக்களப்பு
நஷனல் டிரேடிங் ஸ்டோர்ஸ் – குருநாகல்
2022 ஆம் ஆண்டில் தளம்பல்களுடனான சந்தைச் சூழ்நிலைகள் காணப்பட்ட நிலையில், டோக்கியோ சீமெந்து விநியோகத்தர்களால் ஆற்றப்பட்டிருந்த பங்களிப்புகள் இந்த நிகழ்வில் வெளிக்கொணரப்பட்டிருந்தன. இக்காலப்பகுதியில் பெருமளவு வியாபாரத் தடங்கள் காணப்பட்ட போதிலும், டோக்கியோ சீமெந்தை, நாட்டின் முதல் தர சீமெந்து எனும் உயர்ந்த ஸ்தானத்தில் தொடர்ந்தும் பேணியிருந்தமைக்காக விற்பனை வலையமைப்பினால் ஆற்றப்பட்டிருந்த ஒப்பற்ற பங்களிப்பை, முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் பாராட்டியிருந்தார். நாடு எதிர்நோக்கியிருந்த கடினமான பொருளாதார சூழ்நிலைகள் தொடர்பில் ஞானம் தெரிவிக்கையில், நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு, விற்பனை வலையமைப்புக்கு அவசியமான ஆதரவை வழங்குவதற்கான டோக்கியோ சீமெந்தின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கப்படும் என ஞானம் குறிப்பிட்டார்.
சண்முகம் ஸ்டோர்ஸ் – கிளிநொச்சி
எமரல்ட் ஹார்ட்வெயார் – உடுப்பிட்டி
வர்த்தக நாளிகையைச் சேர்ந்தவர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பிரதான நிகழ்வாக வருடாந்த விநியோகத்தர் மாநாடு அமைந்துள்ளது. கடந்த நான்கு நான்கு தசாப்த காலமாக, நிறுவனத்துக்கும், அதன் பரந்த விற்பனை மற்றும் விநியோக வலையமைப்புக்குமிடையிலான நீண்ட கால பங்காண்மையை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. இலங்கையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், பெறுமதி சேர்ப்பதனூடாக தேசத்தின் பொருளாதாரத்தை வளமூட்டுவதில் வடோக்கியோ சீமெந்து குழுமம் முக்கிய பங்காற்றுகின்றது. இதில் நிறுவனத்தின் விநியோகத்தர் வலையமைப்பு முக்கிய பங்காற்றுகின்றது. விற்பனை வலையைமப்புடன், டோக்கியோ சீமெந்து குழுமம் அதன் பெருமைக்குரிய வர்த்தக நாமங்களான NIPPON CEMENT, TOKYO SUPER, NIPPON CEMENT PRO and ATLAS CEMENT, மற்றும் TOKYO SUPERMIX Ready Mixed Concrete ஆகியவற்றை சந்தையில் கட்டியெழுப்பியுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக நிறுவனத்தின் புத்தாக்கமான தெரிவுகளில் TOKYO SUPERBOND, TOKYO SUPERSEAL மற்றும் TOKYO SEUPERCAST போன்றனவும் அடங்கியுள்ளன.
உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சீமெந்து அடிப்படையிலான புத்தாக்கமான தயாரிப்புகள் போன்றவற்றுக்கான கீர்த்தி நாமத்தை கட்டியெழுப்பியுள்ள டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளர் எனும் தனது நிலையை மீளவும் உறுதி செய்துள்ளது.
டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலை போஷாக்குத்திட்டம் விஸ்தரிப்பு
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் 179 மாணவர்களை உள்வாங்கி தனது “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலைப் போஷாக்குத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் விஸ்தரித்திருந்தது. இந்தத் திட்டத்தில் கொட்டியாகல, வத்தேகம ஸ்ரீமல் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள், சியம்பலாண்டுவ பம்பரகஸ்ரொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் பரவாய ஆரம்ப பாடசாலை மற்றும் கந்தஉடபங்குவ தனகிரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் அடங்கியுள்ளனர். இவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் சமபல மதிய …
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் 179 மாணவர்களை உள்வாங்கி தனது “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலைப் போஷாக்குத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் விஸ்தரித்திருந்தது. இந்தத் திட்டத்தில் கொட்டியாகல, வத்தேகம ஸ்ரீமல் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள், சியம்பலாண்டுவ பம்பரகஸ்ரொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் பரவாய ஆரம்ப பாடசாலை மற்றும் கந்தஉடபங்குவ தனகிரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் அடங்கியுள்ளனர். இவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் சமபல மதிய உணவு வேளை வழங்கப்படுகின்றது.
பல வருட காலமாக அமைதியான முறையில் இந்த சமூக மேம்பாட்டுத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து முன்னெடுத்திருந்ததுடன், இதனூடாக திருகோணமலை, திரியாய மகா வித்தியாலயத்தின் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு மதிய உணவு வேளைகள் வழங்கப்படுகின்றன. மொனராகலை மாவட்ட பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” மதிய உணவு வேளைத் திட்டத்தில் தற்போது 475 க்கும் அதிகமான பின்தங்கிய நிலையிலுள்ள பாடசாலை மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புத்தாக்கங்களுக்கான பணிப்பாளர் பிரவீன் ஞானம் இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டில் அதிகரித்துக் காணப்படும் சிறுவர் மந்தபோஷாக்கு தொடர்பான பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. பெரிதும் கவனம் செலுத்தப்படாத மந்த போஷணை என்பது, எதிர்காலத் தலைமுறையினர் மத்தியில் உள மற்றும் உடல்சார் குறைகளை தோற்றுவிக்கக்கூடியது என்பதுடன், தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியுமாக இருந்தால் மாத்திரமே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பதும் சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்திருக்கும் நிலையில், இந்த வசதியை ஏற்படுத்த நாம் தீர்மானித்தோம்.” என்றார்.
மொனராகலையைச் சேர்ந்த 4 பாடசாலைகளின் 179 மாணவர்கள், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” பாடசாலை போஷாக்குத் திட்டத்தினூடாக மதிய உணவு வேளையைப் பெறுகின்றனர்
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் தினசரி உணவுத் திட்டம் அமைந்திருப்பதுடன், சகல பிரதான உணவு வகைகளிலும் பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பசுப் பாலுணவு மற்றும் உள்நாட்டில் பெறப்பட்ட பழ வகை போன்றன அடங்கியிருக்கும். இவற்றினூடாக பிள்ளைகளின் போஷாக்கு விருத்திக்கான தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது. தொடர்ச்சியாக சிறுவர்கள் பரிபூரண உணவு வேளையை பெற்றுக் கொள்வதை தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையிலும், சிறுவர்களின் வளர்ச்சி இலக்குகள் முன்னேற்றகரமாக எய்தப்படுவதை உறுதி செய்வதற்கும் டோக்கியோ சீமெந்தினால், பாடசாலை நிர்வாகம், பெற்றோர் குழுக்கள், கல்வி அமைச்சின் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் சுகாதார அதிகாரிகளின் பங்கேற்புடனான கண்காணிப்புப் பொறிமுறையும் நிறுவப்பட்டுள்ளது.
சிறுவர்களின் போஷாக்கு வளர்ச்சி தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தினசரி உணவு வேளையில் அடங்கியிருக்கும் பிரதான உணவுக்கூறுகள்
டோக்கியோ சீமெந்து மற்றும் பாடசாலை நிர்வாகத்துக்குமிடையே ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் முக்கிய பங்காற்றியிருந்தார். பாடசாலை மட்டத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உணவு தயாரிப்பில் தன்னார்வ அடிப்படையில் பெற்றோர்கள் முன்வந்து பங்களிப்பு வழங்குகின்றனர். இந்த உணவு வகைகளை தயாரிப்பதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக் கொடுக்கவும், பாடசாலை சமையலறைகளை தூய்மையாக பேணுவதற்கு அவசியமான பொருட்களை வழங்கவும் டோக்கியோ சீமெந்து முன்வந்திருந்தது. இந்தத் திட்டத்தை கண்காணிப்பதற்காக இந்தப் பிரதேசங்களின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அடிக்கடி விஜயம் செய்து, சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் உணவுகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்கின்றனர்.
பாடசாலை மட்டத்தில் தன்னார்வ பெற்றோர்களினால் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் உணவு தயாரிக்கப்படுவதையும், சுகாதார அதிகாரிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதையும் காணலாம்
இந்தத் திட்டம் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஸ்தாபகத் தவிசாளர் தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு வேளையை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இவர் உணர்ந்திருந்தார். அத்துடன், அதனைப் பெற்றுக் கொடுப்பதனூடாக, பாடசாலைக்கான பிள்ளைகளை வருகையை ஊக்குவிக்க முடியும் என்பதுடன், ஆரம்பக் கல்வியை இவர்கள் பூர்த்தி செய்வதற்கு அவசியமான தூண்டுதலாகவும் இது அமைந்திருந்தது. நாட்டில் உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களின் சிறுவர்கள் மத்தியில் மந்த போஷாக்கு மற்றும் வளர்ச்சிப் பாதிப்பு தொடர்பில் சர்வதேச முகவர் அமைப்புகளான UNICEF மற்றும் WB போன்றன எதிர்வுகூரியிருந்த நிலையில், இந்த உணவு வேளைத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய டோக்கியோ சீமெந்து குழுமம் தீர்மானித்திருந்தது. “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” திட்டத்தினூடாக இந்தச் சிறுவர்களின் பெற்றோருக்கு தினசரி தமது பிள்ளைகளுக்கு போதியளவு உணவை வழங்குவதில் காணப்படும் பாரிய சுமைகளில் ஒன்று நிவர்த்திக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக வலுவூட்டல் திட்டங்களில் ஒன்றாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், நாட்டு மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதுபோன்ற திட்டங்களினூடாக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றினூடாக தமது சமூக நலன்புரி மற்றும் சூழல்பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட்டாண்மைச் செயற்பாடுகளில் வெற்றிகரமாக உள்வாங்கியுள்ளதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணிப் பங்காளராகத் திகழும் நோக்கத்துக்கமைய செயலாற்றிய வண்ணமுள்ளது.