Partnerships
of Growth & Success

டோக்கியோ சீமெந்து நிறுவனமானது இலங்கையின் கட்டுமானத்துறை வளர்ச்சியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதுடன் அபிவிருத்திக்கான உறுதியான அடித்தளங்களை அமைக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே எமது வாடிக்கையாளர்களுக்கு அதிக பெறுமதி சேர் உற்பத்திகளை வழங்குவதுடன் அதனூடாக அவர்களுக்கு குறைவான பாவனையில் அதிகமான பயன்பாட்டைத் தந்து நாம் உதவுகின்றோம்.

எமது உற்பத்தி நாமங்கள் எமது நாட்டின் ஒவ்வொரு வீட்டினதும் நம்பிக்கையினை வென்றுள்ளதுடன் அதுவே எம்மை முதற்தர நாமமாக நிலைநிறுத்தியுள்ளது. இன்று நாம் இந்நாட்டின் மிகப் பெரிய உள்நாட்டு சீமெந்து உற்பத்தியாளராகவும், உடன் கலவை கொங்கிரீட் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உலர் சீமெந்துக் கலவை உற்பத்திகளின் சந்தை முன்னோடியாகவும் திகழ்கின்றோம்.

எமது நோக்கம் எமது வாடிக்கையாளர்களுக்கு உறுதியான வேகமான மற்றும் மிகச்சிறந்த கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள உதவுவதுடன் அதுவே டோக்கியோ சீமெந்து மீது எமது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை பல தலைமுறைகளாக உறுதிப்படுத்துகின்றது. மேலும் ஓர் கட்டுமானத்தின் அடித்தளம் முதல் அதன் முடிவு வரை நம்பிக்கை மிகுந்த அர்ப்பணிப்புள்ள ஆலோசகராக எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு நாம் என்றும் தயாராக உள்ளோம்.