Under the "Water for All" flagship national policy framework the Sri Lankan Government has 11 set a goal to provide drinking water facility to 4.7 million families by end 2025. The national project is being implemented to provide clean drinking water to all households in every part of the country

On the other hand, Chronic Kidney Disease of uncertain origin (CKD) continues to devastate the lives of farming communities in multiple districts across Sri Lanka. The disease is closely linked to ground water contaminated with agricultural pollutants. Several studies conducted to find a possible cause for the disease in highly affected areas have narrowed it down to the presence of pesticides, fluoride, heavy metals such as cadmium and arsenic, and hardness of ground water.

content image
content image

Subsequent studies conducted show a slight decline in the occurrence of CKDu as a result of the increase in awareness and adoption of preventive measures, and the steady increase in accessibility to safe drinking water in the affected areas.

Ensuring an adequate supply of treated/purified drinking water, especially in severely affected villages is vital to prevent, and over a period of time to eradicate the disease. This is where both government and non-government institutions, such as corporates and not-for-profit organisations should work together to increase awareness about CKDu and facilitate access to clean drinking water in order to save our future generations

Championing this benevolent endeavour Tokyo Cement Group launched FOUNTAIN OF LIFE Purified Drinking Water Project in selected villages in rural parts of our country, where good quality drinking water is critically important to save thousands of lives

Tokyo Cement Group Fountain of Life sets up customised water purification plants in selected rural villages where access to potable water is a severe problem. Our sister organization, St. Anthony's Hydro Division partners the project with technical expertise and help deploy customized Pure Hydro® water purification solutions with Reverse Osmosis Technology at the selected locations.

Tokyo Cement gamers the support of village development societies and farmer community groups in each area to ensure the sustainable upkeep of the drinking water facility, for the benefit of many generations to come.

content image

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியில் அமைந்துள்ள மூன்று கிராமங்களுக்கு தூய குடிநீர் வசதியை டோக்கியோ சீமெந்து குழுமம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. Re-Awakening Lanka உடன் இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னாவெளி கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த வெரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய கிராமங்களின் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வதிவாளர்கள் இந்தத் திட்டத்தினூடாக தூய குடிநீருக்கான வசதியை பெற்றுக் கொண்டனர். பூநகரி பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



நீர் தூய்மைப்படுத்தல் தீர்வுகளை நிறுவுவதில் டோக்கியோ சீமெந்து அணியின் செயற்பாடுகளை டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் வலு மற்றும் சக்தி செயற்பாடுகளின் பொது முகாமையாளரும், பணிப்பாளருமான ஈ.குகபிரிய வழிநடத்தியிருந்தார். இதில், ஏற்கனவே காணப்படும் மூன்று கிணறுகளை மறுசீரமைப்புச் செய்வது மற்றும் நீரை சேகரித்து வைப்பதற்கு நீர் பம்பிகளையும் தாங்கிகளையும் நிறுவுவது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரதேசத்தின் நீரின் தன்மை தொடர்பான ஆய்வை முன்னெடுத்திருந்ததன் பின்னர், சென்.அந்தனீஸ் ஹைட்ரோ பிரிவினால் நீர் தூய்மையாக்கல் தீர்வு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. நிலக்கீழ் நீரின் தரம் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீட்டின் பிரகாரம், Reverse Osmosis தொழில்நுட்பத்துடனான மூன்று Pure Hydro® நீர் தூய்மையாக்கல் தீர்வுகள் நிறுவப்பட்டிருந்தன. இந்த மனிதநேய திட்டத்தின் அங்கமாக, இந்த கட்டமைப்புகள் நிறுவப்பட்டு முதல் மூன்று வருட காலப்பகுதிக்கு, இந்த தூய்மையாக்கல் பகுதிகளின் பராமரிப்பு மற்றும் பேணல் தொடர்பான நடவடிக்கைகளை சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து டோக்கியோ சீமெந்து முன்னெடுக்கும். வெரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவிய அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.



Re-Awakening Lanka கிராமிய அபிவிருத்தித் திட்டமான Appé Lanka உடன் இணைந்து டோக்கியோ சீமெந்து குழுமம் இந்தத் திட்டத்துக்கு அனுசரணை வழங்கியிருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தும் சமூக மேம்படுத்தல் மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல ஆண்டு காலமாக இந்தப் பகுதியில் பணியாற்றிய அனுபவத்தினூடாக, நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை நிறுவுவதற்கு இந்த மூன்று கிராமங்களை இனங்காண்பதற்கு இந்த அமைப்பு உதவிகளை வழங்கியிருந்தது. பூநகரி பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் Re-Awakening Lanka/Appé Lanka ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திருமதி. ஷானா கொரிஆ கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது திட்டத்தின் முதல் கட்டத்தில், பூநகரி பிரிவைச் சேர்ந்த 21 பாடசாலைகளுக்கு 18 மாத காலப்பகுதியினுள் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பலர் பங்களிப்பு வழங்கியிருந்தனர். பூநகரி போன்ற கிராமத்துக்கு எம்மாலான இயன்ற உதவிகளை வழங்க வேண்டியுள்ளது. இன்று திட்டத்தின் இரண்டாம் பிரிவுக்காக, எம்முடன் டோக்கியோ சீமெந்து நிறுவனமும் கைகோர்த்துள்ளது. இதனூடாக பூநாவெளி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.’ என்றார்.



வெரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய கிராமங்களில் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2000 க்கும் அதிகமான நபர்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாக கடற்றொழில் மற்றும் பண்ணைச் செய்கை அமைந்துள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படும் கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு, சமையல் மற்றும் துப்புரவாக்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரட்சியான காலப்பகுதியில் இந்தத் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கரையோரப்பகுதியில் நிலக்கீழ் நீரின் கடினத்தன்மை மற்றும் உவர்ப்புத் தன்மை காரணமாக, கிராமத்தாருக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. இதன் காரணமாக குடிநீரை கொள்வனவு செய்வது தமது தினசரி வருமானத்தில் பெருமளவு தொகையை ஒதுக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. மழைக்காலங்களில், நீர் காவிச் செல்லும் வண்டிகளுக்கு கிராமங்களை சென்றடைய முடியாத நிலை காணப்படுகின்றது. பிளாஸ்ரிக் கொள்கலன்களில் மழை நீரை சேநகரித்து தமது நாளாந்த தேவைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தக் கிராமங்களில், சிறுவர்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொள்ளும் வசதியை அவதானிக்க முடிந்ததுடன், தமது வீடுகளுக்கு திரும்பும் போது, ஒரு போத்தல் தூய குடிநீரை கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிந்தது. நீரின் கடினத்தன்மை மற்றும் உவர் தன்மை போன்றவற்றின் காரணமாக சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறுநீரக நோய் மற்றும் இதர சிக்கல்கள் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. பிரதேச செயலகம் மற்றும் மாகாண சபை ஊடாக இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு பெருமளவு உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக குடிநீர் பவுசர்களில் கிராமங்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

டோக்கியோ சீமெந்து கம்பனி லங்கா பிஎல்சி கூட்டாண்மை நிலைபேறாண்மை முகாமையாளர் சாலிந்த கந்தபொல கருத்துத் தெரிவிக்கையில், ‘நீர் என்பது மனிதன் அடிப்படைத் தேவையாக அமைந்துள்ளது. எமது நாட்டின் பல பகுதிகளில் சிறந்த தரத்திலான குடிநீர் காணப்படுகின்றது. எவ்வாறாயினும், தமது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்குக்கூட நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் ஆயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர். தூய நீருக்கு தட்டுப்பாடு காணப்படுவதால், சிறுநீரக பிரச்சனை போன்ற நீருடன் தொடர்புடைய நோய்களுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர். இந்த பிரச்சனையை இனங்கண்டு, Appé Lanka எம்மை அணுகி பூநகரி பகுதியில் மூன்று கிராமங்களுக்கு தூய்மையான குடிநீர் விநியோக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கோரியிருந்த நிலையில், நாம் மகிழ்ச்சியுடன் கைகோர்த்தோம். எமது துணை நிறுவனமான சென். அந்தனீஸ் ஹைட்ரோ பிரிவு எமக்கு நீர் தூய்மையாக்கல் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருந்தது. அதனூடாக இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது. பூநகரி பகுதி மக்களுக்கு தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் திருப்தியடைகின்றோம்.’ என்றார்.



கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியைச் சேர்ந்த மக்களுகு;கு தூய குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை என்பது, டோக்கியோ சீமெந்து குழுமம் சமீபத்தில் முன்னெடுத்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக அமைந்துள்ளது. நாட்டின் பொது மக்களுக்கு பெருமளவு பயனளிக்கும் வலுவூட்டல் திட்டங்களை முன்னெடுத்துள்ள முன்னணி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டோக்கியோ சீமெந்து திகழ்கின்றது. இது போன்ற திட்டங்களினூடாக, சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூக நலன்புரி மற்றும் சூழல்பாதுகாப்பு போன்றவற்றை வெற்றிகரமாக ஒன்றிணைத்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்கும் முன்னணி பங்காளராக திகழ்வது எனும் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலித்துள்ளது.

டோக்கியோ சீமெந்து பூநகரியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு தூய குடிநீர் வசதியை நன்கொடையாக வழங்கியது

மதவாச்சி, நாவற்குளம் கிராமத்தில் டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுபீட்சமான எதிர்காலம் எனும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு தொகுதியை, டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ திறந்து வைத்தார். கிளிநொச்சி, பூநகரியில் அமைந்துள்ள மூன்று கிராமங்களிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 500 பேரைக் கொண்ட விவசாயக் கிராமமான நாவற்குளம் பகுதியில் இம்முறை இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அனுராதபுரத்தில் நிலவும் கொடிய சிறுநீரக கோளாறு நோயினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாக இந்தக் கிராமமும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. சுபீட்சத்தை நோக்கிய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளில், நாட்டின் ஒவ்வொரு இல்லத்துக்கும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்திட்டங்களும் அடங்கியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் பங்களிப்பு வழங்கும் வகையில், ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இந்தத் திட்டத்தினூடாக, தூய நீரை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்கள் நிலவும் பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி கருத்துத் தெரிவிக்கையில், ‘2025 ஆம் ஆண்டளவில் சகல இல்லத்துக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாங்கத்தின் அனைவருக்குமான நீர் எனும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கும் நோக்கில் நாம் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தை ஆரம்பித்தோம். குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்தனர். இந்த விவசாய சமூகத்தின் வாழ்க்கையில் கொடிய சிறுநீரக நோய் என்பது பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர்களுக்கு உதவிகளை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். ஆயிரக் கணக்கான உயிர்களை பாதுகாப்பதுடன், நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்துக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.’ என்றார். சிறந்த தரம் வாய்ந்த குடிநீர் வசதி இன்மை காரணமாக, நாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 125 குடும்பங்களில் இதுவரையில் கொடிய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தினூடாக Reverse Osmosis தொழில்நுட்பத்திலமைந்த நீர் தூய்மையாக்கல் தீர்வு நிறுவப்பட்டுள்ளது. இதனூடாக நாளொன்றுக்கு 5,000 லீற்றர்கள் நீரைப் பெற்றுக் கொள்ள முடியும். வட மத்திய மாகாணத்துக்கான கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கிராமிய அபிவிருத்திச் சங்கம் மற்றும் மதவாச்சி பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை நிர்வகிக்க முன்வந்துள்ளதுடன், கிராமத்தின் அனைவரும் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெறுவதை உறுதி செய்யவுள்ளன. ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டத்தின் அடுத்த கட்டத்தில், அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து கிராமங்கள் Reverse Osmosis (RO) தொழில்நுட்பத்திலமைந்த நீர் தூய்மையாக்கல் அலகுகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளன. நாளொன்றுக்கு தலா 10,000 லீற்றர்கள் நீரை வழங்கக்கூடிய இந்த தீர்வுகள், 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முழு அனுசரணையில் நிறுவப்படவுள்ளன.

மதவாச்சி, நாவற்குளம் கிராமத்தில் டோக்கியோ சீமெந்தின் ‘வாழ்வின் நீரூற்றுக்கள்’ திட்டம் முன்னெடுப்பு

மிஹிந்தலையின் சியம்பலாகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தூய்மைப்படுத்திய குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமம் தனது ‘Fountain of Life’திட்டத்தை விரிவாக்கம் செய்திருந்தது. “PureHydro®” நீர் தூய்மையாக்கல் கட்டமைப்பை Reverse Osmosis தொழில்நுட்பத்துடன் நிறுவியிருந்தது. நாளொன்றில் 5000 லீற்றர்கள் நீரை வழங்கும் திறன் கொண்டதாக இது அமைந்துள்ளது. சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சுமார் 650 கிராமத்தாருக்கு அனுகூலமளிப்பதாக இது அமைந்துள்ளது. நாட்டின் சகலருக்கும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. மிஹிந்தலையிலுள்ள சியம்பலாகஸ்வெவ பிரதேச மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ள டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life திட்டம். Fountain of Life நீர் தூய்மையாக்கல் திட்டத்தை டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் பணிப்பாளரும், டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளருமான வி.எம். ரவீந்திரகுமார், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் விநியோக வலையமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அனுராதபுரம் கீர்த்தி டிரேடர்ஸ் திரு. திருமதி. கே. நானயக்கார மற்றும் அனுராதபுரம் நியு கிரான்ட் டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் ஜே.எம்.திரிமான்ன ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தை நிறுவுவதற்கு டோக்கியோ சீமெந்து குழுமத்துக்கு, வட மத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் சியம்பலாகஸ்வெவ மிஹிந்து கிராம அபிவிருத்தி சங்கமும் தமது முழு ஆதரவை வழங்கியிருந்தது. டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசிய தேவையான பாதுகாப்பான மற்றும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நாம் Fountain of Life திட்டத்தை ஆரம்பித்தோம். ஆயிரக் கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்கு தூய தரமான நீர் முக்கியமாக காணப்பட்ட நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய பகுதிகளில் இந்தத் திட்டம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைவருக்கும் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் அரசாங்கத்தின் இலக்கை எய்துவதற்கு, ‘Fountain of Life‘ திட்டத்தினூடாக பங்களிப்பு வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார். அனுராதபுரத்தைச் சேர்ந்த கீர்த்தி டிரேடர்ஸ் திரு மற்றும் திருமதி. கே. நானயக்கார மற்றும் நியு கிரான்ட் டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் ஜே.எம். திரிமான்ன ஆகியோர் டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் பணிப்பாளரும் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளருமான வி.எம்.ரவீந்திரகுமார் ஆகியோர், மிஹிந்தலை, சியம்பலாகஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்ட டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life குடிநீர் விநியோக திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் காணப்படுகின்றனர். சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த மக்களின் பிரதான ஜீவனோபாயமாக, சேனைச் செய்கை மற்றும் புகழ்பெற்ற மஹாகந்தராவ வாவியில் நன்னீர் மீன்பிடித்தல் போன்றனவாக அமைந்திருக்கும் நிலையில், தூய குடிநீர் வசதியின்மையால் பெருமளவு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். கொடிய சிறுநீரக நோயினால் (CKDu) இந்த கிராமத்தைச் சேர்ந்த சில வசிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் இலகுவில் பாதிப்புறக்கூடிய குழுவினர் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த நோய் அமைந்துள்ளது. வட மத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சியம்பலாகஸ்வெவ கிராமிய அபிவிருத்தி சங்கத்துடன் டோக்கியோ சீமெந்து குழுமம் இணைந்து, கைவிடப்பட்ட நீர் விநியோகக் கட்டமைப்பொன்றை புதுப்பித்து புனருத்தாரணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட RO திறன் கொண்ட நீர் தூய்மையாக்கல் கட்டமைப்பு நிறுவப்பட்டது. Fountain of Life திட்டத்தின் காரணமாக, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானமீட்டும் 171 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக எதிர்கால தலைமுறையினரின் நலனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சியம்பலாகஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்ட டோக்கியோ சீமெந்து ‘Fountain of Life’ நீர் சுத்திகரிப்பு ஆலையில், மிஹிந்து கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் வட மத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ‘Fountain of Life’ குடிநீர் தூய்மைப்படுத்தல் திட்டத்தினூடாக, இதுவரையில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 3100க்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் அனுகூலம் சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்து நீர் தூய்மையாக்கல் தொகுதிகளை நிறுவியுள்ளதனூடாக, நாளொன்றில் மொத்தமாக 30,000 லீற்றர்கள் நீரை சுத்திகரித்து விநியோகிக்கக்கூடியதாகவுள்ளது. இந்தத் திட்டங்களினூடாக பயன்பெறும் கிராமங்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் சிறுநீரக நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமமான நாவற்குளம் ஆகியன அடங்கியுள்ளன. எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பின்தங்கிய கிராமங்களில் மேலும் பல நீர் தூய்மைப்படுத்தல் வசதிகளை நிறுவி அதனூடாக Fountain of Life செயற்திட்டத்தின் சென்றடைவை மேலும் விஸ்தரிப்பதற்கு டோக்கியோ சீமெந்து குழுமம் திட்டமிட்டுள்ளது. இது போன்ற பல சமூக வலுவூட்டல் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ள நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டோக்கியோ சீமெந்து திகழ்வதுடன், அவற்றினூடாக, நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு என்பதற்கமைய இவ்வாறான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றினூடாக, சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக தமது கூட்டாண்மை வர்த்தக நாமத்தின் அங்கமாக ஒன்றிணைத்துள்ளதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் முன்னணி பங்காளராக திகழும் நோக்கத்துக்கமைய அமைந்துள்ளது.

டோக்கியோ சீமெந்து நிறுவனம் சியம்பலாகஸ்வெவ பகுதியில் ‘Fountain of Life’குடிநீர் வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பு

அனுராதபுர மாவட்டத்தின் ரம்பேவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெஹெரகல மற்றும் மதவாச்சியைச் சேர்ந்த தச்சிதாமன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு விவசாய குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life திட்டத்தினூடாக தூய குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு காணப்படும் இந்தப் பகுதியில் இவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தினூடாக இவர்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு கிராமங்களிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரேனும் கொடிய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் விவசாய செய்கையை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர். Fountain of Life நிறுவப்பட்டுள்ளதனூடாக நாளொன்றில் தலா 5000 லீற்றர் மற்றும் 1500 லீற்றர் நீரை தூய்மைப்படுத்தும் திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இப்பிரதேசங்களின் மக்களுக்கு தற்போது தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும். மொத்தமாக நாளொன்றுக்கு 46,500 லீற்றர்கள் வரை தூய்மைப்படுத்திய குடிநீரை விநியோகிக்கும் வசதியைக் கொண்டுள்ள டோக்கியோ சீமெந்தின் ‘Fountain of Life’ திட்டத்தினூடாக இதுவரையில் பல்லன்குளம், தச்சிதாமன, நாவற்குளம் மற்றும் சியம்பலாகஸ்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4500 குடும்பங்களை சென்றடைந்துள்ளது. அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சியில் வெராவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கொடிய சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. ரம்பேவ மற்றும் மதவாச்சி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இரு திட்டங்களை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷாந்த உடவத்த அங்குரார்ப்பணம் செய்தார். இவருடன், வவுனியா பிராந்தியத்துக்கான டோக்கியோ சீமெந்து விநியோகத்தர் சண்முகன் ஸ்டோர்ஸின் எஸ். ஆனந்தராஜ் மற்றும் அனுராதபுர பிராந்தியத்துக்கான டோக்கியோ சீமெந்து விநியோகத்தர் நோர்த் ஏஜென்சீஸ் ரி. மஹாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கிராமிய விவசாய குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் ஆற்றும் பங்களிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், தச்சிதாமன பிரதேசத்தில் நிறுவப்பட்ட சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் மதவாச்சி பிரதேச செயலாளர் திருமதி. சந்திரிகா மாலவிஆரச்சி பங்கேற்றிருந்தார். வடமத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முழு ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு ஒவ்வொரு கிராமங்களையும் சேர்ந்த கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினதும் ஆதரவு கிடைத்திருந்ததுடன், இந்தத் திட்டத்தை தமது சமூகத்தார் சார்பில் வரவேற்றிருந்தன. விவசாய சமூக குழுக்களின் தன்னார்வ அடிப்படையிலான ஆதரவும் கிடைத்திருந்ததுடன், பல தலைமுறையினரின் அனுகூலத்துக்காக நீர் வசதியை நிலைபேறான வகையில் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உறுதி செய்கின்றது. கொடிய சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தூய குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து டோக்கியோ சீமெந்து குழுமத்தினால், Fountain of Life நிகழ்ச்சியினூடாக நீர் தூய்மையாக்கும் திட்டங்களை நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக PureHydro® நீர் தீர்வுகள் Reverse Osmosis (RO) ஆற்றலுடன் நிறுவப்படுகின்றன. தனது சகோதர நிறுவனமான சென். அந்தனீஸ் ஹைட்ரோ பிரிவின் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று இந்தப் பணிகளை மேற்கொள்கின்றது. எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதிலும் பின்தங்கிய கிராமங்களில் இந்தத் திட்டத்தை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பணிகளை நிறுவனம் தொடர்ந்தும் மேற்கொள்ளும். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் இது போன்ற பல சமூக வலுவூட்டும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் தூர நோக்கின் அடிப்படையிலான நேர்த்தியான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசத்தை கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளராக திகழும் நிறுவனத்தின் கருப்பொருளுக்கமைய, இது போன்ற சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுப்பதில் டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ச்சியாக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகின்றது.

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது