Latest Press Release

News Image
டோக்கியோ சீமெந்து குழுமம் மற்றும் Foundation of Goodness: கிரிக்கட் கனவுகளை ஊக்குவிப்பதில் ஒரு தசாப்த கால பூர்த்தி

Photo: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் பயிற்சி அகடமி அனுசரணையை Foundation of Goodness இன் ஸ்தாபகர்/பிரதான காப்பாளர் குஷில் குணசேகரவிடம் கையளிக்கிறார். டோக்கியோ சீமெந்து குழுமம், தொடர்ச்சியான 10ஆவது வருடமாகவும் கிரிக்கட் பயிற்சி முகாம்களுக்கு அனுசரணை வழங்க Foundation of Goodness (FoG) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த பத்தாண்டு கால பங்காண்மையினூடாக, பின்தங்கிய பிரதேசங்களின் நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவ மாணவியருக்கு

Photo: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் பயிற்சி அகடமி அனுசரணையை Foundation of Goodness இன் ஸ்தாபகர்/பிரதான காப்பாளர் குஷில் குணசேகரவிடம் கையளிக்கிறார். டோக்கியோ சீமெந்து குழுமம், தொடர்ச்சியான 10ஆவது வருடமாகவும் கிரிக்கட் பயிற்சி முகாம்களுக்கு அனுசரணை வழங்க Foundation of Goodness (FoG) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த பத்தாண்டு கால பங்காண்மையினூடாக, பின்தங்கிய பிரதேசங்களின் நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவ மாணவியருக்கு பிரதேச, தேசிய மட்டத்திற்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருந்தது. இந்த ஆண்டின் அனுசரணையினூடாக, வட பிராந்திய பயிற்சி முகாமில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு, அப்பிரதேசத்திலிருக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு தமது கிரிக்கட் கனவுகளை நோக்கி பயணிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் பத்து ஆண்டு கால வரலாற்றில், டோக்கியோ சிமென்ட் குழுமம் மற்றும் Foundation of Goodness ஆகியவற்றுக்கு இடையேயான இந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டாண்மை, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த 23 திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் இலங்கை தேசிய அணிகளில் இடங்களைப் பெற்றுள்ளனர். இன்றுவரை, வடக்கில் இருந்து கிட்டத்தட்ட 4,200 சிறுவர்களும் மற்றும் தெற்கு கிராமங்களில் உள்ள 35 கிராமங்களில் உள்ள எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த 3,780 சிறுவர்களும், தொழில்முறைப் பயிற்சியாளர்களால் நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களால் பயனடைந்துள்ளனர். இதில் இலங்கையின் பெண்கள் தேசிய அணியில் அடங்கியுள்ள நட்சத்திர வீராங்கனைகளான கவீஷா தில்ஹாரி, சச்சினி நிசன்சலா, இமேஷா துலானி, காவ்யா கவிந்தி, உமாஷா திமீஷானி, நிலக்சனா சந்தமினி, சத்யா சந்தீபனி, சச்சினி கிம்ஹானி மற்றும் பலரும் அடங்கியுள்ளதுடன், மகளிர் T20 ஆசிய கிண்ணம் 2024 ஐ வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். FOG கிரிக்கட் அகடமி, இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி நட்சத்திரங்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், நவோத் பரணவிதான, மல்ஷ தருபதி, ஹரேன் வீரசிங்க மற்றும் எஸ். மதுஷன் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. இது டோக்கியோ சீமெந்து – Foundation of Goodness கிரிக்கட் பயிற்சி அகடமி ஆகியவற்றினால் ஏற்படுத்தப்பட்ட உறுதியான அடித்தளத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. 2025 செப்டெம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு விஜயம் செய்ய தெரிவாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் தெரிவாகியிருந்த ஹார்ட்லி கல்லூரியின் வி.ஆகாஷ் மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் கே. முதுலன் இந்த ஆண்டின் முயற்சிகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், வட பிராந்திய கிரிக்கட் முகாம் ஹார்ட்லி கல்லூரியின் வி. ஆகாஷ் மற்றும் யாழ்ப்பாணம். சென் ஜோன்ஸ் கல்லூரியின் கே. முதுலன் ஆகியோர் 2025 செப்டெம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கான இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய குழாமில் தெரிவு செய்யப்பட்டிருந்தமையை பெருமையுடன் கொண்டாடியிருந்தது. மேலும், தென் பயிற்சி முகாம், ரத்கம தேவபதிராஜா கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட அணியினரின் சிறந்த திறமைகளை கொண்டாடியது. 2024/25 MCC Lord’s Scholarship பெற்றவரும் வளர்ந்து வரும் நட்சத்திரமுமான அரோஷ சித்துமினவின் தலைமையில், கொழும்பில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை காலிறுதிப் போட்டியில் அவர் அணி 150 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழிகோலியிருந்தார். அதன் பின்னர், அணி 17 வயதுக்குட்பட்டோருக்கான ‘A’ பிரிவு சம்பியன்ஷிப்பை வென்றது. இந்த வெற்றியுடன், அவர்களின் 13 வயதுக்குட்பட்டோர் அணி இணைச் சம்பியனானது, அத்துடன் 15 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. இதன் மூலம், ரத்கம தேவபதிராஜா கல்லூரி ஒரே பருவத்தில் நான்கு தேசிய இறுதிப் போட்டிகளை எட்டியதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், ஹிக்கடுவையில் உள்ள MCC வசதி மையமானது சம்பியன்களை உருவாக்கியுள்ளது. அங்கு ஸ்ரீ சுமங்கல கல்லூரி 16 தொடர்ச்சியான போட்டிகளில் வென்று, 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டு நாள் மற்றும் ஒரு நாள் பிரிவு 3 பட்டங்கள் இரண்டையும் கைப்பற்றியது. இது ஒரு வரலாற்றுப் பாடசாலைச் சாதனையாகும், மேலும் அவர்கள் பிரிவு 2-க்குத் தகுதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற டோக்கியோ சீமெந்து வடக்கு கிரிக்கட் முகாமின் அமர்வுகளின் காட்சிகள் டோக்கியோ சீமெந்து- Foundation of Goodness கிரிக்கட் பயிற்சி அகடமி, 2014 ஆம் ஆண்டில் ஹிக்கடுவை மற்றும் சீனிகமவில் இரண்டு முழுமையாக வசதியளிக்கப்பட்ட உயர்தர பயிற்சி மைதானங்களை அமைத்ததன் மூலம் தொடங்கப்பட்டது. தெற்கில் பெற்ற வெற்றியானது, 50 நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை நட்சத்திரத் தரத்திலான இலங்கை கிரிக்கெட் வீரர்களாகப் பயிற்றுவிக்கும் இலக்குடன், 2017 ஆம் ஆண்டில் வடக்குப் பகுதிக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த டோக்கியோ சீமெந்தைத் தூண்டியது. வடக்கில் நடைபெறும் பயிற்சி முகாம்கள் மிகுந்த உற்சாக வரவேற்பைப் பெற்றன. இது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் உள்ள அனைத்து வயதுப் பிரிவுகளிலிருந்தும் பல பாடசாலை மாணவி மற்றும் மாணவர் கிரிக்கெட் வீரர்களை ஈர்த்துள்ளது. இவர்கள் தேசிய பட்டங்கள் முதல் சர்வதேச அங்கீகாரம் வரை குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற டோக்கியோ சீமெந்து வடக்கு கிரிக்கட் முகாமின் மேலும் சில காட்சிகள் Foundation of Goodness இன் விளையாட்டுப் பணிப்பாளர் அனுர டி சில்வாவின் தலைமையில், புகழ்பெற்ற பயிற்றுனர்களான ஹேமந்த தேவப்பிரிய மற்றும் சுசந்த கருணாரத்ன ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, இந்த அகடமி இளம் திறமையாளர்களுக்குத் திறன்மிக்க பயிற்சி மற்றும் வசதிகளை அணுக வாய்ப்பளிப்பதன் மூலம் ஆரம்ப மட்டத்திலேயே அவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலதிகமாக, மாவட்ட மற்றும் பாடசாலை மட்டப் பயிற்றுனர்கள், நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களின் திறன்களை மெருகூட்டவும், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் திறன்மிக்க வீரர்கள் குழாமில் அவர்களை உள்வாங்கவும் ஆதரவளிக்கின்றனர். சீனிகம Surrey Oval இல் டோக்கியோ சீமெந்து தெற்கு கிரிக்கட் முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன டோக்கியோ சீமெந்து – Foundation of Goodness கூட்டாண்மையின் இந்த 10 ஆண்டு மைல்கல்லானது, சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கிராமப்புறத்தைச் சேர்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களின் புதிய தலைமுறையினரின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் பெருமையை சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு எடுத்துச் செல்லக்கூடியவர்களாக தயார்ப்படுத்தப்படுகின்றனர்.

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
ஜப்பானிய தூதுவர் டோக்கியோ சீமெந்து திருகோணமலை தொழிற்சாலைக்கு விஜயம்

திருகோணமலை, செப்டெம்பர் 6, 2025 – இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடா, டோக்கியோ சீமெந்து திருகோணமலை தொழிற்சாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொருளாதார உறவுகள் மற்றும் நீண்ட கால நட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது. தூதுவருடன், நிதிசார் இணைப்பாளர் யுகாகோ மிசுனுமா மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சச்சி டனாகா ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவில் ஒரு மில்லியன்

திருகோணமலை, செப்டெம்பர் 6, 2025 – இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடா, டோக்கியோ சீமெந்து திருகோணமலை தொழிற்சாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொருளாதார உறவுகள் மற்றும் நீண்ட கால நட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது. தூதுவருடன், நிதிசார் இணைப்பாளர் யுகாகோ மிசுனுமா மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சச்சி டனாகா ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவில் ஒரு மில்லியன் மெட்ரிக் டொன்களை மேலதிகமாக சேர்த்திருந்த, பிந்திய விரிவாக்க செயற்திட்டம் குறித்தக விளக்கங்கள் இந்த விஜயத்தின் போது வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் பொருளாதார விரிவாக்கம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தியில் வலுவூட்டும் மைல்கல்லாக இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து சிறப்பு நிலையத்தில், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் மற்றும் டோக்கியோ சீமெந்தின் தொழினுட்ப பங்காளர் மிட்சுபிஷி UBE சீமெந்து கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் மிச்சியோ மட்சொகா ஆகியோர் தூதுக்குழுவினரை வரவேற்றதுடன், தொழிற்சாலையினுள் விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீமெந்து ஆலை, திருகோணமலை துறைமுகத்தில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து ஜெட்டி மற்றும் ஏ.வை.எஸ். ஞானம் கிராமம் இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையம் ஆகியவற்றுக்கான விஜயங்கள் இதில் அடங்கியிருந்ததுடன், சமூக-பொருளாதார அபிவிருத்தியில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலித்திருந்தது. நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான பங்காண்மையின் அடையாளமாக டோக்கியோ சீமெந்து திகழ்வதுடன், தொழிற்துறை வளர்ச்சியை பிரதிபலிப்பது மட்டுமன்றி, நிலைபேறான அபிவிருத்திக்கான பகிரப்பட்ட நோக்கையும் வெளிப்படுத்திய வண்ணமுள்ளது. உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் உற்பத்தியில் இலங்கையின் மாபெரும் செயற்பாட்டாளராக திகழும் டோக்கியோ சீமெந்து, நிர்மாணத் துறையில் நம்பிக்கையை வென்ற விநியோகத்தர் எனும் கீர்த்தி நாமத்தையும் பெற்றுள்ளது. உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தினூடாக தேசிய பொருளாதாரத்துக்கு வலுவூட்டுவதற்கு நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையின் தொழிற்துறை முன்னேற்றத்துக்கும் வலிமை சேர்க்கிறது. தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றுக்கு ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்னோடியான பங்காளராக, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்த செயற்பாட்டாளராகவும் திகழ்கிறது.

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் ‘Industry-Uni Collaboration Day 2025’ சிவில் பொறியியல் புத்தாக்க நிகழ்வுக்கு அனுசரணை

டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவு கைகோர்த்து, ‘Industry–University Collaboration Day 2025’ நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. கல்விச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை பங்காளர்களுக்கிடையே ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. ஜுலை 28 ஆம் திகதி இரத்மலான, நீர் மற்றும் துப்புரவுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி

டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவு கைகோர்த்து, ‘Industry–University Collaboration Day 2025’ நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. கல்விச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை பங்காளர்களுக்கிடையே ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. ஜுலை 28 ஆம் திகதி இரத்மலான, நீர் மற்றும் துப்புரவுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய கலந்து கொண்டார். இதர விருந்தினர்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். லிலந்த சமரநாயக்க மற்றும் சிவில் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரி பேராசிரியர். குஷான் விஜேசுந்தர, சிரேஷ்ட பீட அங்கத்தவர்கள், புகழ்பெற்ற தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் கடந்த கால மற்றும் தற்போது பயிலும் பட்டதாரி மாணவர்கள் போன்றவர்களும் அடங்கியிருந்தனர். பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரிய தமது விசேட உரையின் போது, சர்வதேச நியமங்களுக்கு பொருந்தும் வகையில் STEM கல்வியை ஊக்குவிக்க, கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவம், தொழிற்துறையை மேம்படுத்தி, அவசியமான அபிவிருத்தி இலக்குகளை நிவர்த்தி செய்வதற்கு பல்கலைக்கழக ஆய்வின் நிலைப்பாடு மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்கு சமத்துவமான கல்வி வாய்ப்புகளின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இணைந்த பணிகள், நிஜ உலக பிரச்சனைகளை தீர்க்கும் திறன்களைக் கொண்ட மற்றும் தொழிற்துறையில் செயலாற்றக்கூடிய பட்டதாரிகளை தயார்ப்படுத்துகின்றமைக்காக பல்கலைக்கழகத்தின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டுதல்களை தெரிவித்திருந்தார். பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவின் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்கள், தமது புத்தாக்கமான தீர்வுகளை நிகழ்வில் வெளிப்படுத்துவதை காணலாம். பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் இந்த வருடாந்த நிகழ்வின் போது, சிவில் பொறியியல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் படைத்த பட்டதாரி மாணவர்களின் ஆய்வு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பிரத்தியேகமான சிந்தனைகள் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றினூடாக தற்போதைய பொறியியல் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய யோசனைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய கட்டமைப்பாக அமைந்திருந்தது. அரசாங்கம், அரச அதிகார அமைப்புகள், ஆய்வு நிலையங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பொறியியல் மாணவர்கள் போன்ற பல தரப்பினரை ஒன்றிணைத்து, உறுதியான தொழிற்துறைசார்-கல்விக் கட்டமைப்பு கைகோர்ப்பை ஊக்குவித்திருந்தது. சிவில் பொறியியலின் முழுமையான நிரலில் கட்டமைப்பு, புவியியல் தொழினுட்பம், போக்குவரத்து, நீர் வளங்கள் மற்றும் சூழல் பொறியியல், நிகழ்வில் உள்ளடக்கப்பட்ட போஸ்டர் கண்காட்சிகள், வாய்மூல விளக்கங்கள் மற்றும் கல்வி-தொழிற்துறைசார் பங்காண்மைகளின் நேர்வு பற்றிய ஆய்வுகள் போன்றன அடங்கியிருந்தன. இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, மாணவர்கள் இரண்டு நிமிடங்களினுள் தமது ஆய்வுத் திட்டங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்களை வழங்கியிருந்தனர். துரிதமான விளக்கக்காட்சிகள் நடைமுறை பொறியியல் தீர்வுகளை வலியுறுத்தின, மாணவர்களுக்கு நிஜ உலகத் தேவைகளுடன் இணைந்த துறையின் அதிநவீன ஆராய்ச்சி திறன்களை முன்னிலைப்படுத்த வாய்ப்பளித்தன. மேலும், சிவில் பொறியியல் பிரிவின் பீட அங்கத்தவர்களால் ஆழமான தொழிற்துறை ஈடுபாட்டுக்கான வாய்ப்புகளை வழங்கியிருந்ததுடன், மாணவர்கள், கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் மத்தியில் அர்த்தமுள்ள உரையாடலுக்கு வழிகோலியிருந்தன. சிவில் பொறியியல் பிரிவுடன் நீண்ட காலமாக டோக்கியோ சீமெந்து குழுமம் பேணும் பங்காண்மையை மேலும் தொடரும் வண்ணம், ‘Industry-University Collaboration Day 2025,’ இன் ஏக அனுசரணையாளராக இணைந்து வழங்கியிருந்த பங்களிப்பினூடாக, தொழிற்துறை தலைவர்களை எதிர்கால பொறியியலாளர்களாக தயார்ப்படுத்துவது மற்றும் பிரயோக ஆய்வை மேம்படுத்துவது போன்றவற்றை கவனம் செலுத்தியிருந்தது. டோக்கியோ சீமெந்தின் நவீன வசதிகள் படைத்த ஆய்வு மற்றும் விருத்தி ஹப் பகுதியான Construction Research Centre (CRC) க்கு, சீமெந்து மற்றும் கொங்கிரீட் போன்றவற்றில் புத்தாக்கங்களை வெளிப்படுத்த இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்திருந்தது. அதனூடாக மேம்படுத்தப்பட்ட, நிலைபேறான நிர்மாணத் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள தலைமைத்துவம் மேலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்துடன் கொண்டுள்ள நீண்ட கால பிணைப்பை இந்த நிகழ்வு மேலும் மேம்படுத்தியிருந்ததுடன், உலகத் தரம் வாய்ந்த அறிவு பகிர்வை மேற்கொண்டு, உள்நாட்டு நிர்மாணத்துறையை முன்னேற்றுவதை ஊக்குவிப்பதில் குழுமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
டோக்கியோ சீமெந்து 2025 நிலைபேறாண்மை விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு உயர் விருதுகளை சுவீகரித்தது

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சிறந்த நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக, அண்மையில் நடைபெற்ற இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 நிகழ்வில் இரு பெருமைக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குழுமத்தின் புத்தாக்க பெறுமதி சேர் தயாரிப்பான TOKYO SUPERBOND Premium Tile Adhesive இற்கு, நிலைபேறான புத்தாக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குறைந்த காபன் வெளிப்பாடு மற்றும் ஆரோக்கியமான வசிப்பிட சூழலை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. உள்ளக வாயு தரத்தை மேம்படுத்தும் அதன் low Volatile Organic

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சிறந்த நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக, அண்மையில் நடைபெற்ற இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 நிகழ்வில் இரு பெருமைக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குழுமத்தின் புத்தாக்க பெறுமதி சேர் தயாரிப்பான TOKYO SUPERBOND Premium Tile Adhesive இற்கு, நிலைபேறான புத்தாக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குறைந்த காபன் வெளிப்பாடு மற்றும் ஆரோக்கியமான வசிப்பிட சூழலை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. உள்ளக வாயு தரத்தை மேம்படுத்தும் அதன் low Volatile Organic Compound (VOC) உள்ளடக்கத்திறக்காக இந்த விசேட விருது வழங்கப்பட்டிருந்தது. திருகோணமலையில், டோக்கியோ சீமெந்து தொழினுட்ப சிறப்பு நிலையத்துக்காக இரண்டாவது விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையத்தின் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்ட GREEN கட்டட அலங்கார அம்சங்களுக்காக பிரத்தியேகமான சூழலுக்கு நட்பான பொறியியலுக்கான கௌரவிப்பாக அமைந்திருந்தது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிலைபேறாண்மைக்கான ஆழமான மற்றும் தொழிற்துறை முன்னோடியான அர்ப்பணிப்பை இந்த இரு விருதுகள் மேலும் உறுதி செய்துள்ளன. இவை, அவற்றின் கூட்டாண்மை DNA இல் உள்ளடங்கியுள்ளதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றிலும் ஆழமான ஊடுருவியுள்ளன. Sri Lankan Sustainability Awards 2025 நிகழ்வில் TOKYO SUPERBOND Premium Tile Adhesive இற்கு நிலைபேறான புத்தாக்க விருது வழங்கப்பட்டிருந்தது 13ஆவது World Construction Symposium (WCS) மற்றும் இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 ஆகியன, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலகவின் பங்கேற்புடனும், பேராசிரியர். சித்ரா வெடிக்கார, பேராசிரியர். யசங்கிகா சந்தநாயக்க, கலாநிதி. ரொஹான் கருணாரட்ன, பொறியியலாளர். சாகர குணவர்தன, கலன அல்விஸ் மற்றும் பொறியியலாளர் சாலிய களுஆராச்சி ஆகியோரின் பங்கேற்புடனும் நடைபெற்றது. இந்த ஆண்டின் நிகழ்வை Ceylon Institute of Builders (CIOB), மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டட வணிகவியல் மற்றும் முகாமைத்துவ ஆய்வு அலகு மற்றும் கட்டட பொறியியல் திணைக்களம் ஆகியவற்றின் பங்காண்மையுடன் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வை நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அங்கீகரித்திருந்தது. வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, இலங்கையின் நிர்மாணத் துறையில் சிறந்த நிலைபேறாண்மை முயற்சிகளை உள்வாங்கி, சூழலுக்கு பொருத்தமான வியாபார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. நிலைபேறான நிர்மாண செயற்திட்ட விருதைப் பெற்ற திருகோணமலை, டோக்கியோ சீமெந்து தொழினுட்ப சிறப்பு நிலையம், டோக்கியோ சீமெந்து உற்பத்தி ஆலையின் நிர்வாக மையப்பகுதியில் இயங்குகிறது. குழுமத்தின் ISO 17025 சான்றளிக்கப்பட்ட R&D மற்றும் தர உறுதிப்படுத்தல் ஆய்வுகூடங்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நான்கு தன்னியக்கமயப்படுத்தப்பட்ட சீமெந்து ஆலைகளையும், இரு பயோமாஸ் வலுப் பிறப்பாக்கல் ஆலைகளையும் ஒன்றிணைத்துள்ளது. அவற்றினூடாக முழு உற்பத்தி செயன்முறையிலும் நிலைபேறான வலு பயன்படுத்தப்படுகின்றதுடன், ஒப்பற்ற வினைத்திறன் மற்றும் சூழல் வினைத்திறன் போன்றன பேணப்படுகின்றன. இந்த நிலையத்தில் 200 இருக்கைகளைக் கொண்ட நவீன வசதிகள் படைத்த கேட்போர்கூடம் அமைந்துள்ளதுடன், மாநாடுகள், கல்விசார் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக சென்றடைவுச் செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுக்கப் பயன்படுகின்றன. Sri Lankan Sustainability Awards 2025இல், திருகோணமலை டோக்கியோ சீமெந்து தொழினுட்ப புத்தாக்க நிலையத்துக்கு, நிலைபேறான நிர்மாண செயற்திட்ட விருது வழங்கப்பட்டிருந்தது இலங்கை பசுமை கட்டட சம்மேளனத்தினால் 2019 ஆம் ஆண்டில் Platinum GREEN® Building சான்றைப் பெற்றுள்ள, இந்த தொழினுட்ப நிலையம், சூழலுக்கு நட்பான அலங்கார அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், வலு மற்றும் வள வினைத்திறனை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. 75kW சூரிய வலுவினால் இயங்கும் இந்த நிலையம், மின் வழங்கல் கட்டமைப்பில் தங்கியிருக்கும் தன்மையை குறைத்துள்ளது. வடகிழக்கு நோக்கிய அமைவினால், இயற்கை சூரிய ஒளி கிடைப்பதுடன், வெப்ப ஊடுகடத்தலை தவிர்ப்பதற்காக low-E glass பொருத்தப்பட்டுள்ளது. LED ஒளியூட்டல் மற்றும் தனித்தனியாக கட்டுப்பாடுகளுடனான zoned HVAC கட்டமைப்புகள் போன்றவற்றினால் வலுப்பாவனை குறைக்கப்படுகிறது. நீர் பாதுகாப்பு ஏற்பாடுகளில், கழிவுநீர் மீள்சுழற்சிக் கட்டமைப்பு, மற்றும் வாயு குளிரூட்டியினூடாக பெறும் நீரை விவசாய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தல் போன்றவற்றினூடாக, சூழலுக்கு ஏற்படும் பாதகமான தாக்கம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. BS EN 12004 நியமத்தின் கீழ் C2ETS1 வகுப்புப் பிரிவை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்து, வகைப்படுத்தப்பட்ட மணல், பொலிமர்கள் மற்றும் சேதன சேர்மானங்கள் போன்றவற்றின் உயர்மட்ட ஒன்றிணைவுக்காக நிலைபேறான புத்தாக்க விருதை TOKYO SUPERBOND Premium Tile Adhesive வெற்றியீட்டியிருந்தது. செம்மையாக்கப்பட்ட சேர்மானம், குறைந்தளவு சீமெந்தை பயன்படுத்துவதுடன், உயர் வினைத்திறனை வழங்கி, அதன் காபன் வெளிப்பாட்டை பெருமளவு குறைக்கிறது. பொலிமர் – மாற்றியமைக்கப்பட்ட இந்த adhesive இனால், மேம்படுத்தப்பட்ட நெகிழ்ச்சித் தன்மை மற்றும் உயர் ஒட்டும் வலிமை போன்றன வழங்கப்படுவதுடன், வெப்ப காலநிலைகளில், பெருமளவு மாறுபடும் வெப்பநிலைகளுக்கு பொருந்தக்கூடியதாக அமைந்திருக்கச் செய்துள்ளது. அத்துடன், வெடிப்பு அல்லது பொப்பிங் ஏற்படுவதை தவிர்த்து, பெரியளவிலான டைல்கள் பதிப்பிற்கு உகந்ததாக அமைந்திருக்கச் செய்துள்ளது. குறைந்த VOC பொருளடக்கமான, 0.36 w/w% (5.2 g/L, ITI இனால் பரிசோதிக்கப்பட்டது), செரமிக் டைல் அதெசிவ்களுக்கான U.S. Green Building Council’இன் 65 g/L எல்லைப் பெறுமதியை விட மிகவும் குறைந்ததாகவும் அமைந்திருப்பதுடன், உள்ளகப் பகுதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான, ஆரோக்கியமான தெரிவாகவும் அமைந்துள்ளது. TOKYO SUPERBOND Premium Tile Adhesive தொழிற்துறையின் முன்னோடி எனும் வகையில், சூழலில் ஏற்படும் தாக்கத்தை தணிப்பதற்கு, புத்தாக்கத்தை ஒன்றிணைப்பதற்கு, வடிவமைப்பு மற்றும் தனது செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றில் நிலைபேறாண்மை போன்றவற்றுக்காக மூலோபாய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளில் புதுப்பிக்கத்தக்க வலு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் முக்கியத்துவம் பெறுவதுடன், 24MW திறன் கொள்ளளவைக் கொண்டுள்ளது. நிலைபேறாண்மை செயற்பாடுகளை பின்பற்றுகின்றமையை ஊக்குவிக்கும் வகையில், டோக்கியோ சீமெந்து குழுமத்துக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிலைபேறாண்மை தொடர்பில் குழுமத்தின் வாக்குறுதிக்கமைய பல்வேறு பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், டோக்கியோ சீமெந்து, இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற உயர் உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் விநியோகத்தர் எனும் அந்தஸ்த்தை எய்தியுள்ளது. சமூக நலன்பேணல் மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை நாட்டுக்கு வளமூட்டும் செயற்பாடுகளிலும், மக்கள் மற்றும் சூழல் போன்ற நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஒன்றிணைப்பதனூடாக டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்னணி பங்காளர் எனும் தனது நிலையை மீள உறுதி செய்துள்ளது.– Photo: திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து தொழினுட்ப சிறப்பு நிலையத்தினால், தொழினுட்ப மற்றும் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் R&D வசதிகள் முன்னெடுக்கப்படுகின்றன

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
டோக்கியோ சீமெந்து பணிப்பாளர் சபைக்கு இரு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

அனுபவம் வாய்ந்த வங்கியியலாளரான ஜெகன் துரைரட்னம் மற்றும் மிச்சியோ மட்சுகா ஆகியோர் டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் புதிய பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வங்கியியல் துறையில் துரைரட்னம் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். கொமர்ஷல் வங்கியில் 36 வருட காலம் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளார். 2012 ஏப்ரல் முதல் 2014 ஜுலை வரை கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளராக செயலாற்றியிருந்ததுடன், 2014 ஜுலை முதல் 2018 ஜுலை மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில், கொமர்ஷல் வங்கியின்

அனுபவம் வாய்ந்த வங்கியியலாளரான ஜெகன் துரைரட்னம் மற்றும் மிச்சியோ மட்சுகா ஆகியோர் டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் புதிய பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வங்கியியல் துறையில் துரைரட்னம் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். கொமர்ஷல் வங்கியில் 36 வருட காலம் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளார். 2012 ஏப்ரல் முதல் 2014 ஜுலை வரை கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளராக செயலாற்றியிருந்ததுடன், 2014 ஜுலை முதல் 2018 ஜுலை மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில், கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயலாற்றியிருந்தார். கொமர்ஷல் வங்கியில் அவர் மேலும் பல சிரேஷ்ட பதவிகளை வகித்திருந்தார். அதில், பிரதம செயற்பாட்டு அதிகாரி, பிரதி பொது முகாமையாளர் – சர்வதேசம், உதவி பொது முகாமையாளர் – சர்வதேசம் மற்றும் இறக்குமதிகளுக்கான தலைமை அதிகாரியாக செயலாற்றியிருந்தார். கொமர்ஷல் டிவலப்மன்ட் கம்பனி பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளராகவும், லங்கா ஃபினான்ஷியல் சேர்விசஸ் பியுரோ லிமிடெட்டின் பணிப்பாளராகவும் செயலாற்றியிருந்தார். துரைரட்னம் தற்போது, DFCC பாங்க் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன தவிசாளராக திகழ்கிறார். ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் பிஎல்சி, செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட், எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் என்விரோ சொலூஷன்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் திகழ்கிறார். அத்துடன், டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக மிச்சியோ மட்சுகா நியமிக்கப்பட்டுள்ளார். UBE Singapore Pte. Ltd. இன் பிரேரிக்கப்பட்ட மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக இவர் திகழ்கிறார். முன்னர் இந்த நிலையை வகித்த ஷுய்ச்சி நகமொடோவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மட்சுகா தற்போது, UBE Singapore Pte. Ltd. இன் முகாமைத்துவ பணிப்பாளராக திகழ்கிறார். இவர் ஜப்பானின், சொஃபியா பல்கலைக்கழகத்தில் கலை இளமானிப் பட்டத்தை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவின், பப்சன் கல்லூரியில் முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். வணிக அபிவிருத்தி மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் இவர் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், பொது முகாமையாளர் மற்றும் செயற்திட்ட முகாமையாளர் போன்ற நிலைகளையும் வகித்துள்ளார். இந்த நியமனங்களுடன், டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சியின் பணிப்பாளர் சபையில், தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், கலாநிதி. இந்திரஜித் குமாரசுவாமி, ஏ.டி.பி. தல்வத்தே, ரவி டயஸ், டபிள்யு. சி. பெர்னான்டோ, பிரவீன் ஞானம், ஏ.ஏ.லுடோவிக், மனோ சேகரம், மிச்சியோ மட்சுகா மற்றும் ஜெகன் துரைரட்னம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகளை இலங்கையில் உற்பத்தி செய்யும் மாபெரும் உற்பத்தியாளராக டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்கிறது. உள்நாட்டின் நிறுவனமாக திகழும் டோக்கியோ சீமெந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றுவதுடன், உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தினூடாக தேசிய பொருளாதாரத்தை வளமூட்டிய வண்ணமுள்ளது. உள்நாட்டு நிர்மாணத்துறையில் நன்மதிப்பை வென்ற நிறுவனமாக திகழும் டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் முன்னணி பங்காளராகவும் திகழ்கிறது.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Archive

2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2025JanFebMarAprMayJunJulAugSepOctNovDec