Latest Press Release

News Image
டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் நியுசிலாந்து ரக்பியுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டின் ‘Ivuru Rakina Pawuru’ ஆரம்பம்

டோக்கியோ சீமெந்து குழுமம், மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Ivuru Rakina Pawuru திட்டத்தின் 2026 ஆம் ஆண்டின் மர நடுகைத் திட்டத்தை கண்டி பொல்கொல்ல வாவியின் அருகில் ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட நியுசிலாந்து ரக்பி அணியின் அங்கத்தவர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாதுகாத்து மீள நிறுவுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தத் திட்டம், அதன் பெறுமதிக்காக சர்வதேச சென்றடைவை பெற்றுள்ளதையும் அவதானிக்க

டோக்கியோ சீமெந்து குழுமம், மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Ivuru Rakina Pawuru திட்டத்தின் 2026 ஆம் ஆண்டின் மர நடுகைத் திட்டத்தை கண்டி பொல்கொல்ல வாவியின் அருகில் ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட நியுசிலாந்து ரக்பி அணியின் அங்கத்தவர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாதுகாத்து மீள நிறுவுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தத் திட்டம், அதன் பெறுமதிக்காக சர்வதேச சென்றடைவை பெற்றுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சூழல் அதிகாரசபை, இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உயரதிகாரிகள், கண்டி, பொல்கொல்ல மாதிரி பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுடன் நியுசிலாந்து 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட ரக்பி அணி வீரர்களும் பங்கேற்று, 100 கும்புக் மரக் கன்றுகளை நாட்டியிருந்தனர்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Ivuru Rakina Pawuru நிகழ்ச்சித் திட்டம், 2017 ஆம் ஆண்டு முதல் சுற்றாடல் அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. மருத மரம் மற்றும் இலுப்பை போன்ற தாவரக் கன்றுகளை மகாவலி கரையோரப் பகுதிகளில் நிறுவி, மீள்வனாந்தரச் செய்கையை மேற்கொள்வதில் பங்களிப்பு வழங்கி, முக்கியமான நீரேந்து பகுதிகளின் நிலைபேறான முகாமைத்துவத்தை பேணுவதில் ஆதரவளிக்கப்படுகிறது.





டோக்கியோ சீமெந்து குழுமம் தனது வனாந்தர மர வளர்ப்பு செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் வகையில் Ivuru Rakina Pawuru திட்டம் அமைந்துள்ளது. மருத மரம், கிரஞ்ச, இலுப்பை மற்றும் தெட்ட மரம் போன்ற மருத்துவ பெறுமதிகளைக் கொண்ட காட்டு மரங்களை விநியோகிப்பதில் திருகோணமலை மற்றும் மஹியங்கனை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்கள் ஈடுபட்டுள்ளன. இயற்கை உயிரியல் பரம்பலை மீள நிறுவுவதில் இந்த தாவர வகைகள் உதவுவதுடன், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதிலும் பங்களிப்பு வழங்கும். அவை பல்வேறு சமூக மற்றும் அரச ஸ்தாபனங்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், மகாவலி வலயங்கள் அடங்கலாக, நாடளாவிய ரீதியில் மீள் வனாந்தரச் செய்கை செயற்பாடுகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.





நிறுவனத்தின் பரந்தளவு நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. அதனூடாக, சமூக நலன்பேணல் மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை தனது கூட்டாண்மை செயற்பாடுகளில் வெற்றிகரமாக சேர்த்துள்ளது. தேசத்தை, மக்களை மற்றும் சூழலை வளப்படுத்தும் தமது தொடர்ச்சியான செயற்பாடுகள், இது போன்ற தொலைநோக்குச் செயற்பாடுகளினூடாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளராக டோக்கியோ சீமெந்து குழுமம் தம்மை நிலைநிறுத்தியுள்ளது.

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
டோக்கியோ சீமெந்து தனது 2026 விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு மகுடம் சூட்டியது

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு மகுடம் சூட்டியது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறந்த விற்பனையாளர் 2026 எனும் உயர் விருதை யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை கிளிநொச்சி சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் குருநாகல் நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன. மொத்தமாக 135 சிறந்த விற்பனையாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள்

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு மகுடம் சூட்டியது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறந்த விற்பனையாளர் 2026 எனும் உயர் விருதை யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை கிளிநொச்சி சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் குருநாகல் நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன. மொத்தமாக 135 சிறந்த விற்பனையாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

டோக்கியோ சீமெந்து குரூப் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். குழுமத்தின் முகாமைத்துவ குழு மற்றும் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் அணிகளின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து விநியோக நாளிகையின் சகல அங்கத்தவர்களையும் இந்நிகழ்வு ஒன்றிணைத்திருந்ததுடன், சகலருக்கும் நினைவில் நிலைத்திருக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில் களிப்பூட்டும் நிகழ்வுகள் அடங்கியிருந்ததுடன், டோக்கியோ சீமெந்து விற்பனை வலையமைப்பின் சிறந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ரால் நிகழ்வில் உரையாற்றுகையில், நிறுவனத்திற்கும் அதன் நாளிகை பங்காளர்களுக்குமிடையே காணப்படும் உறவின் வலிமையை பாராட்டியிருந்தார். நம்பிக்கை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இது கட்டியெழுப்பப்பட்டதுடன், சவால்களை ஒப்பற்ற நம்பிக்கையுடன் கடந்து வந்திருந்தமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் நாடு முழுவதையும் சேர்ந்த சகல விற்பனையாளர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்ததுடன், அண்மைக் காலங்களில் நிலவிய வியாபார தடங்களுக்கு மத்தியிலும், தொழிற்துறையின் தலைமைத்துவத்தை டோக்கியோ சீமெந்து நிறுவனத்துக்கு தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்ததை குறிப்பிட்டார். நிறுவனத்தின் விற்பனை பங்காளர் வலையமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதற்கான டோக்கியோ சீமெந்தின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் மீள உறுதி செய்திருந்ததுடன், அவர்களுக்கு வெற்றிகரமாக உதவுவதற்கும் உறுதியளித்திருந்தார். டோக்கியோ சீமெந்து மற்றும் அதன் விற்பனையாளர்களுக்கிடையே நீண்ட காலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையை பாராட்டியதுடன், பகிரப்பட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் செயலாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.





சிறந்த விற்பனையாளர் 2026 – யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் சார்பாக வழங்கப்பட்ட விருதை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்வதை காணலாம்.



இரண்டாமிடம் – டோக்கியோ சீமெந்து விற்பனையாளர் மாநாடு 2026 – கிளிநொச்சி, சண்முகம் ஸ்ரோர்ஸ்



மூன்றாமிடம் – டோக்கியோ சீமெந்து விற்பனையாளர் மாநாடு 2026 – குருநாகல், நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ்


தனது பெறுமதி வாய்ந்த விற்பனை விநியோக வலையமைப்பின் சாதனைகளை கொண்டாடும் வருடாந்த நிகழ்வாக விற்பனையாளர் மாநாடு அமைந்துள்ளது. உள்நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட வியாபாரம் எனும் வகையில், தேசிய பொருளாதாரத்துக்கு தனது பெறுமதி சங்கிலியினூடாக வலுவூட்ட டோக்கியோ சீமெந்து குழுமம் எதிர்பார்ப்பதுடன், அதில் நிறுவனத்தின் விற்பனையாளர்கள் முக்கியமான பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்றிணைந்து குழுமம், பெருமைக்குரிய மற்றும் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களான NIPPON CEMENT, TOKYO SUPER, NIPPON CEMENT PRO மற்றும் ATLAS CEMENT ஆகியவற்றை கட்டியெழுப்பியுள்ளது. அதன் முன்னணி தயாரிப்பான TOKYO SUPER Cement அண்மையில், பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுக் கொண்டு, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு ஆகியவற்றுக்கான தனது சிறந்த அர்ப்பணிப்பிற்கு கௌரவிப்பை பெற்றுக் கொண்டது. TOKYO SUPERMIX ரெடி-மிக்ஸ்ட் கொங்கிறீட் வலையமைப்பு நிறுவனத்தின் செயற்பாடுகளின் முக்கியன செயலாற்றும் கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன், புத்தாக்கமான உலர் மோடார் தயாரிப்புகளான TOKYO SUPERBOND, TOKYO SUPERSEAL மற்றும் TOKYO SUPERCAST போன்றனவும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இவை தத்தமது பிரிவுகளில் சந்தை முன்னோடிகளாக அமைந்துள்ளன.

இலங்கையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் செயற்திட்டங்களுக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கி, தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் முன்னணி பங்காளர் எனும் தனது நிலையை உறுதியாக பேணியுள்ளது. தரத்தை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதில் நிறுவனம் தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தொழிற்துறையின் புத்தாக்கமான புரட்சியாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.



படங்கள்: டோக்கியோ விற்பனையாளர் மாநாடு 2026 இல் உயர் விருது வெற்றவர்கள் – தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் குழும சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் தசந்த உடவத்த ஆகியோர் காணப்படுகின்றனர்.

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
டோக்கியோ சுப்பர் இலங்கையில் SUPERBRANDS அந்தஸ்த்தைப் பெற்ற ஒரே சீமெந்து வர்த்தக நாமம்

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முன்னணி வர்த்தக நாமமான டோக்கியோ சுப்பர் சீமெந்து, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு போன்வற்றுக்கான சிறந்த அர்ப்பணிப்புக்காக 2025 ஆம் ஆண்டுக்கான பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுள்ளது. சந்தையில் காணப்படும் மிகவும் பெறுமதி வாய்ந்த மற்றும் வலிமையான வர்த்தக நாமங்களின் சிறந்த வர்த்தக நாம கதைகளைக் கொண்டாடும் வகையில், அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் வைபவத்தின் போது, இந்த கௌரவிப்பு டோக்கியோ சுப்பருக்கு வழங்கப்பட்டிருந்தது. உயர்தரத் தரநிலைகள் மற்றும் செயல்திறனை அடிப்படையாகக்

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முன்னணி வர்த்தக நாமமான டோக்கியோ சுப்பர் சீமெந்து, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு போன்வற்றுக்கான சிறந்த அர்ப்பணிப்புக்காக 2025 ஆம் ஆண்டுக்கான பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுள்ளது. சந்தையில் காணப்படும் மிகவும் பெறுமதி வாய்ந்த மற்றும் வலிமையான வர்த்தக நாமங்களின் சிறந்த வர்த்தக நாம கதைகளைக் கொண்டாடும் வகையில், அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் வைபவத்தின் போது, இந்த கௌரவிப்பு டோக்கியோ சுப்பருக்கு வழங்கப்பட்டிருந்தது.

உயர்தரத் தரநிலைகள் மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள டோக்கியோ சுப்பர், கட்டுமானத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான சீமெந்து வர்த்தகநாமமான டோக்கியோ சுப்பர் OPC மற்றும் சந்தையிலுள்ள மிகவும் சூழல்நேயம் மிக்க சீமெந்து வர்த்தகநாமமான டோக்கியோ சுப்பர் BHC ஆகிய பெயர்களில் இது நுகர்வோரை சென்றடைகிறது. 2025 ஆம் ஆண்டின் SUPERBRANDS 2025 எனும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரே சீமெந்து வர்த்தகநாமம் டோக்கியோ சுப்பர் ஆகும். மேலும், Waterproofers தயாரிப்புகள், Wall plasters தயாரிப்புகள், Mortars தயாரிப்புகள் மற்றும் சந்தையில் முன்னணியிலுள்ள Tile adhesives கள் உள்ளிட்ட நவீன கட்டுமான தீர்வுகளையும் டோக்கியோ சுப்பர் வழங்கி வருகின்றது.

நாட்டின் நன்மதிப்பைப் பெற்ற வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழும் டோக்கியோ சுப்பர், இலங்கையின் முன்னேற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் சந்தைப்படுத்தப்படுகிறது. கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் கட்டுமானத் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இக்குழுமம் பெற்றுள்ள பல கௌரவமான விருதுகளின் வரிசையில், SUPERBRANDS அங்கீகாரம் சமீபத்திய இணைப்பாகும். இலங்கையில் பொதுப் பட்டியலிடப்பட்ட ஒரே சீமெந்து உற்பத்தியாளரான டோக்கியோ சீமெந்து குழுமம், சீமெந்து, ரெடி-மிக்ஸ் கொன்கிறீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான உலர் கலவை தயாரிப்புகளில் சந்தை முன்னணியில் உள்ளது. நாட்டின் அடையாளச் சின்னங்களாகத் திகழும் பாரிய கட்டுமானங்கள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயர்தர சீமெந்து மற்றும் கொன்கிறீட்டை விநியோகிப்பதன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு நம்பகமான பங்காளியாக டோக்கியோ சீமெந்து குழுமம் தனது சந்தை ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

லண்டனை அடிப்படையாகக் கொண்ட Superbrands Worldwide இன் உள்நாட்டு பிரதிநிதியாக SUPERBRANDS Sri Lanka திகழ்கிறது. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் சுயாதீன வர்த்தகநாமங்களின் அங்கீகாரத்தை தீர்மானிக்கும் உயர்மட்ட அமைப்பாக திகழ்கிறது. வர்த்தகநாமமிடல், விளம்பரம், சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, தயாரிப்பு மேலாண்மை, மக்கள் தொடர்பு மற்றும் வணிக மேலாண்மை ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீனக் குழுவினால் ‘சூப்பர் பிராண்ட்ஸ்’ தெரிவு செய்யப்படுகின்றது. இந்தத் தரவரிசையில் மிக உயர்ந்த மதிப்பீட்டைப் பெறும் வர்த்தகநாமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ‘SUPERBRANDS’ அந்தஸ்து வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இது ஒரு வர்த்தகநாமத்தின் மதிப்பையும் கௌரவத்தையும் அதிகரிப்பதோடு, ஏனைய போட்டியாளர்களிடமிருந்து அதனைத் தனித்துவப்படுத்திக் காட்டுகின்றது.

Photo: (இடமிருந்து) பிராங்க் கேப்ரியல் – பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்), LMD, ஷரிபுல் இஸ்லாம் – தவிசாளர், Superbrands ஸ்ரீ லங்கா, டி.எஸ்.(பில்லி) வல்பொல – பணிப்பாளர் சந்தைப்படுத்தல், டோக்கியோ சீமெந்து குழுமம், நிபுன பெரேரா – சந்தைப்படுத்தல் முகாமையாளர் கூட்டாண்மை மற்றும் பெறுமதி சேர் தயாரிப்புகள், டோக்கியோ சீமெந்து குழுமம், பிரையன் இம்மானுவேல் – முகாமைத்துவ பணிப்பாளர், LMD

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
டோக்கியோ சீமெந்து குழுமம் முன்னெடுத்திருந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்பாட்டுக்காக SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 விருதுகள் வழங்கலில் கௌரவிப்பைப் பெற்றது

சமூக முன்னேற்றம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்காக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நீண்ட கால அர்ப்பணிப்புக்காக அண்மையில் நடைபெற்ற SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான மெரிட் விருதை சுவீகரித்தது. இந்த கௌரவிப்பினூடாக, அர்த்தமுள்ள, அளவிடக்கூடிய சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக தேசிய மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன குழுமத்தின் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகள் கௌரவிப்பைப் பெற்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட சூழல்

சமூக முன்னேற்றம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்காக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நீண்ட கால அர்ப்பணிப்புக்காக அண்மையில் நடைபெற்ற SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான மெரிட் விருதை சுவீகரித்தது. இந்த கௌரவிப்பினூடாக, அர்த்தமுள்ள, அளவிடக்கூடிய சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக தேசிய மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன குழுமத்தின் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகள் கௌரவிப்பைப் பெற்றது.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட சூழல் செயற்பாடுகளில் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்ட நடவடிக்கைகளில் கண்டல் தாவர வளர்ப்பு, வனாந்தர தாவர கன்றுகள் வளர்ப்புப் பகுதி, பவளப் பாறைகள் மறுசீரமைப்பு, கடல் உயிரியல் பல்வகைமை பேணும் திட்டங்கள் மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அதன் புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் திட்டம் ஆகியன அடங்கியிருந்தன. டோக்கியோ சீமெந்து பல தசாப்த கால கைகோர்த்த செயற்பாடு மற்றும் நிபுணத்துவ செயற்திட்ட ஈடுபாடு போன்றவற்றினூடாக, இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு பகுதிகளிலும் டோக்கியோ சீமெந்து குறிப்பிடத்தக்களவு மைல்கற்களை எய்தியுள்ளது.

தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் வகையில், தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டி, அவர்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி இயங்கச் செய்யக்கூடிய பல சமூகச் சென்றடைவு செயற்திட்டங்களை டோக்கியோ சீமெந்து முன்னெடுக்கிறது. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக, தம்புளை மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ். ஞானம் கிராமிய இருதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையங்கள், டோக்கியோ சீமெந்து Fountain of Life தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் செயற்திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக எதிர்கால பாடசாலை உணவு வேளை செயற்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமை போன்றன அடங்கியுள்ளன.

SLIM வர்த்தக நாம சிறப்புகளில், ஆண்டின் சிறந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்திற்கான மெரிட் விருதை வென்றுள்ளதனூடாக, டோக்கியோ சீமெந்து குழுமம் நாடு மற்றும் அதன் மக்கள் மற்றும் சூழல் ஆகியவற்றை வளமூட்டுவதில் கவனம் செலுத்தும் உறுதியான முயற்சிகளின் ஆழம் மற்றும் வினைத்திறன் ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சகல டோக்கியோ சீமெந்து பங்குதாரர்களின் வர்த்தக நாம லோயல்டிக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. எதிர்கால தலைமுறைகளுக்கு வலுவூட்டல், சூழல்கட்டமைப்புகளை ஆறச் செய்தல் மற்றும் சமூகளை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு சமூகத்தை வழிநடத்திச் செல்வதற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இலங்கையின் முன்னணி சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் பெறுமதி சேர் தயாரிப்புகள் உற்பத்தியாளருக்கு கிடைத்துள்ள பிந்திய விருதாக இது அமைந்துள்ளது. அதனூடாக, சமூக நலன் மற்றும் சூழல் வழிநடத்தல் ஆகியவற்றில் டோக்கியோ சீமெந்து காண்பிக்கும் அர்ப்பணிப்பை அதன் நிறுவனசார் செயற்பாடுகளில் உள்வாங்கி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியான பங்காளர் எனும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பங்களிப்புச் செய்கிறது.

Facebooktwitterredditpinterestlinkedinmail
News Image
டோக்கியோ சீமெந்து குழுமம் மற்றும் Foundation of Goodness: கிரிக்கட் கனவுகளை ஊக்குவிப்பதில் ஒரு தசாப்த கால பூர்த்தி

Photo: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் பயிற்சி அகடமி அனுசரணையை Foundation of Goodness இன் ஸ்தாபகர்/பிரதான காப்பாளர் குஷில் குணசேகரவிடம் கையளிக்கிறார். டோக்கியோ சீமெந்து குழுமம், தொடர்ச்சியான 10ஆவது வருடமாகவும் கிரிக்கட் பயிற்சி முகாம்களுக்கு அனுசரணை வழங்க Foundation of Goodness (FoG) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த பத்தாண்டு கால பங்காண்மையினூடாக, பின்தங்கிய பிரதேசங்களின் நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவ மாணவியருக்கு

Photo: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் பயிற்சி அகடமி அனுசரணையை Foundation of Goodness இன் ஸ்தாபகர்/பிரதான காப்பாளர் குஷில் குணசேகரவிடம் கையளிக்கிறார். டோக்கியோ சீமெந்து குழுமம், தொடர்ச்சியான 10ஆவது வருடமாகவும் கிரிக்கட் பயிற்சி முகாம்களுக்கு அனுசரணை வழங்க Foundation of Goodness (FoG) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கடந்த பத்தாண்டு கால பங்காண்மையினூடாக, பின்தங்கிய பிரதேசங்களின் நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவ மாணவியருக்கு பிரதேச, தேசிய மட்டத்திற்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருந்தது. இந்த ஆண்டின் அனுசரணையினூடாக, வட பிராந்திய பயிற்சி முகாமில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு, அப்பிரதேசத்திலிருக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு தமது கிரிக்கட் கனவுகளை நோக்கி பயணிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் பத்து ஆண்டு கால வரலாற்றில், டோக்கியோ சிமென்ட் குழுமம் மற்றும் Foundation of Goodness ஆகியவற்றுக்கு இடையேயான இந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டாண்மை, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த 23 திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் இலங்கை தேசிய அணிகளில் இடங்களைப் பெற்றுள்ளனர். இன்றுவரை, வடக்கில் இருந்து கிட்டத்தட்ட 4,200 சிறுவர்களும் மற்றும் தெற்கு கிராமங்களில் உள்ள 35 கிராமங்களில் உள்ள எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த 3,780 சிறுவர்களும், தொழில்முறைப் பயிற்சியாளர்களால் நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களால் பயனடைந்துள்ளனர். இதில் இலங்கையின் பெண்கள் தேசிய அணியில் அடங்கியுள்ள நட்சத்திர வீராங்கனைகளான கவீஷா தில்ஹாரி, சச்சினி நிசன்சலா, இமேஷா துலானி, காவ்யா கவிந்தி, உமாஷா திமீஷானி, நிலக்சனா சந்தமினி, சத்யா சந்தீபனி, சச்சினி கிம்ஹானி மற்றும் பலரும் அடங்கியுள்ளதுடன், மகளிர் T20 ஆசிய கிண்ணம் 2024 ஐ வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். FOG கிரிக்கட் அகடமி, இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி நட்சத்திரங்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், நவோத் பரணவிதான, மல்ஷ தருபதி, ஹரேன் வீரசிங்க மற்றும் எஸ். மதுஷன் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. இது டோக்கியோ சீமெந்து – Foundation of Goodness கிரிக்கட் பயிற்சி அகடமி ஆகியவற்றினால் ஏற்படுத்தப்பட்ட உறுதியான அடித்தளத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. 2025 செப்டெம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு விஜயம் செய்ய தெரிவாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் தெரிவாகியிருந்த ஹார்ட்லி கல்லூரியின் வி.ஆகாஷ் மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் கே. முதுலன் இந்த ஆண்டின் முயற்சிகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், வட பிராந்திய கிரிக்கட் முகாம் ஹார்ட்லி கல்லூரியின் வி. ஆகாஷ் மற்றும் யாழ்ப்பாணம். சென் ஜோன்ஸ் கல்லூரியின் கே. முதுலன் ஆகியோர் 2025 செப்டெம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கான இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய குழாமில் தெரிவு செய்யப்பட்டிருந்தமையை பெருமையுடன் கொண்டாடியிருந்தது. மேலும், தென் பயிற்சி முகாம், ரத்கம தேவபதிராஜா கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட அணியினரின் சிறந்த திறமைகளை கொண்டாடியது. 2024/25 MCC Lord’s Scholarship பெற்றவரும் வளர்ந்து வரும் நட்சத்திரமுமான அரோஷ சித்துமினவின் தலைமையில், கொழும்பில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை காலிறுதிப் போட்டியில் அவர் அணி 150 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழிகோலியிருந்தார். அதன் பின்னர், அணி 17 வயதுக்குட்பட்டோருக்கான ‘A’ பிரிவு சம்பியன்ஷிப்பை வென்றது. இந்த வெற்றியுடன், அவர்களின் 13 வயதுக்குட்பட்டோர் அணி இணைச் சம்பியனானது, அத்துடன் 15 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. இதன் மூலம், ரத்கம தேவபதிராஜா கல்லூரி ஒரே பருவத்தில் நான்கு தேசிய இறுதிப் போட்டிகளை எட்டியதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், ஹிக்கடுவையில் உள்ள MCC வசதி மையமானது சம்பியன்களை உருவாக்கியுள்ளது. அங்கு ஸ்ரீ சுமங்கல கல்லூரி 16 தொடர்ச்சியான போட்டிகளில் வென்று, 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டு நாள் மற்றும் ஒரு நாள் பிரிவு 3 பட்டங்கள் இரண்டையும் கைப்பற்றியது. இது ஒரு வரலாற்றுப் பாடசாலைச் சாதனையாகும், மேலும் அவர்கள் பிரிவு 2-க்குத் தகுதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற டோக்கியோ சீமெந்து வடக்கு கிரிக்கட் முகாமின் அமர்வுகளின் காட்சிகள் டோக்கியோ சீமெந்து- Foundation of Goodness கிரிக்கட் பயிற்சி அகடமி, 2014 ஆம் ஆண்டில் ஹிக்கடுவை மற்றும் சீனிகமவில் இரண்டு முழுமையாக வசதியளிக்கப்பட்ட உயர்தர பயிற்சி மைதானங்களை அமைத்ததன் மூலம் தொடங்கப்பட்டது. தெற்கில் பெற்ற வெற்றியானது, 50 நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை நட்சத்திரத் தரத்திலான இலங்கை கிரிக்கெட் வீரர்களாகப் பயிற்றுவிக்கும் இலக்குடன், 2017 ஆம் ஆண்டில் வடக்குப் பகுதிக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த டோக்கியோ சீமெந்தைத் தூண்டியது. வடக்கில் நடைபெறும் பயிற்சி முகாம்கள் மிகுந்த உற்சாக வரவேற்பைப் பெற்றன. இது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் உள்ள அனைத்து வயதுப் பிரிவுகளிலிருந்தும் பல பாடசாலை மாணவி மற்றும் மாணவர் கிரிக்கெட் வீரர்களை ஈர்த்துள்ளது. இவர்கள் தேசிய பட்டங்கள் முதல் சர்வதேச அங்கீகாரம் வரை குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற டோக்கியோ சீமெந்து வடக்கு கிரிக்கட் முகாமின் மேலும் சில காட்சிகள் Foundation of Goodness இன் விளையாட்டுப் பணிப்பாளர் அனுர டி சில்வாவின் தலைமையில், புகழ்பெற்ற பயிற்றுனர்களான ஹேமந்த தேவப்பிரிய மற்றும் சுசந்த கருணாரத்ன ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, இந்த அகடமி இளம் திறமையாளர்களுக்குத் திறன்மிக்க பயிற்சி மற்றும் வசதிகளை அணுக வாய்ப்பளிப்பதன் மூலம் ஆரம்ப மட்டத்திலேயே அவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலதிகமாக, மாவட்ட மற்றும் பாடசாலை மட்டப் பயிற்றுனர்கள், நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களின் திறன்களை மெருகூட்டவும், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் திறன்மிக்க வீரர்கள் குழாமில் அவர்களை உள்வாங்கவும் ஆதரவளிக்கின்றனர். சீனிகம Surrey Oval இல் டோக்கியோ சீமெந்து தெற்கு கிரிக்கட் முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன டோக்கியோ சீமெந்து – Foundation of Goodness கூட்டாண்மையின் இந்த 10 ஆண்டு மைல்கல்லானது, சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கிராமப்புறத்தைச் சேர்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களின் புதிய தலைமுறையினரின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் பெருமையை சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு எடுத்துச் செல்லக்கூடியவர்களாக தயார்ப்படுத்தப்படுகின்றனர்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Archive

2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2025JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2026JanFebMarAprMayJunJulAugSepOctNovDec