தொடர்ச்சியான 4ஆவது ஆண்டாக கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க Foundation of Goodness க்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்கு டோக்கியோ சீமெந்து குழுமம் தமது பங்காண்மையை மேம்படுத்தும் வகையில், 2018ஆம் ஆண்டிலும் Foundation of Goodness க்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்த இரு அமைப்புகளுக்குமிடையில் தொடர்ச்சியான 4வது ஆண்டாக இந்த அனுசரணை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தெற்கு மற்றும் வட பிராந்தியங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் கிரிக்கெட் திறமையை வெளிக்கொணரும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளது. ஹிக்கடுவ மற்றும் சீனிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த

The Music Project உடன் இரண்டாவது ஆண்டாகவும் டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

The Music Project க்கான தமது அனுசரணையை இரண்டாவது ஆண்டாகவும் வழங்க டோக்கியோ சீமெந்து குழுமம் முன்வந்துள்ளது. The Music Project என்பது அரச சார்பற்ற நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை இசை ஊடாக மேம்படுத்துவதற்கு வலுவூட்டும் திட்டமாக இது அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்காண்மை ஊடாக, டோக்கியோ சீமெந்து குழுமம் முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலயத்தைச்

TOKYO SUPER BHC சீமெந்துக்கு தற்போது கட்டிட நிறுவனத்தின் பசுமைதரச் சான்றிதழ் (CIOB Green Mark)

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் டோக்கியோ சுப்பர் BHC – நீரியல் கலவை (Blended Hydraulic) சீமெந்தானது, பெருமைக்குரிய பசுமைதரச் (Green Mark) சான்றிதழைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் சூழலுக்கு நட்பான கட்டிட செயன்முறைகளை மேம்படுத்துவதற்கான நிபுணத்துவ அமைப்பான இலங்கை கட்டிட நிறுவனத்திடமிருந்து (Ceylon Institute of Builders) இந்தக் கௌரவிப்பைப் பெற்றிருக்கின்றது. இலங்கை கட்டிட நிறுவனத்தின் பசுமை (CIOB Green Mark) விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ரமாடா ஹோட்டலில் இடம்பெற்ற போது

இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர் சம்மேளனத்தின் 2018 வருடாந்த அமர்வில் கலாநிதி. ஷிங்கோ அசமோடோ பிரதான உரை

உலகத்தரம் வாய்ந்த அறிவு பகிர்வு அமர்வுக்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சம்மேளனம் (SSE-SL)> 2018 ஆம் ஆண்டுக்கான தனது வருடாந்த அமர்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கியிருந்ததுடன், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதான ஆய்வு கண்டறிதல்களை பகிர்ந்து கொள்ளல் மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்பாக வருடாந்த அமர்வு அமைந்துள்ளது. புத்தாக்கம் மற்றும் கட்டமைப்பு

கொழும்பின் மையப்பகுதியில் நவீன வசதிகள் படைத்த நிர்மாண ஆய்வு நிலையம் அங்குரார்ப்பணம்

நிர்மாணத்துறையின் கொங்கிறீற் மற்றும் சீமெந்து பரிசோதனை தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், சுயாதீன ஆய்வு நிலையத்தை மெருகேற்றி அங்குரார்ப்பணம் செய்துள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் இல. 865 1/1> கலாநிதி. டானிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 9 எனும் முகவரியில் இந்த ஆய்வு நிலையம் அமைந்துள்ளது. உள்நாட்டு சர்வதேச தரங்களுக்கமைய சீமெந்து, கொங்கிறீற் மற்றும் உலர் சாந்து தயாரிப்புகள் பரிசோதனை மற்றும் சான்றளிப்பு ஆகிய நடவடிக்கைகளை இந்த நிலையம் மேற்கொள்ளும். இந்த ISO 17025

நிர்மாணத்துறையின் தேசிய திறனை கட்டியெழுப்ப டோக்கியோ சீமெந்து – NAITA கைகோர்ப்பு

டோக்கியோ சீமெந்து மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) ஆகியன உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. நிர்மாணத்துறைக்கு அவசியமான நிபுணத்துவம் வாய்ந்தவர்களை கட்டியெழுப்பும் வகையில் அவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி தகைமையை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், தம்புளையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தினூடாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் வழிகாட்டலில், டோக்கியோ சீமெந்தினால் மேசன்மாரன் திறனை

திருகோணமலை கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையில் டோக்கியோ சீமெந்து பங்கேற்பு

டோக்கியோ சீமெந்தின் திருகோணமலை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் திருகோணமலை கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையுடன் இணைந்து செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேசிய கடற்கரை மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் 2018 இன் அங்கமாக இந்த தூய்மையாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. திருகோணமலை உவர் மலை, சுப்ரா களப்பு பூங்கா பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் சகல அரச

ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண கல்வியகத்தில் மற்றுமொரு இராணுவ குழுவினர் மேசன் பயிற்சியை பூர்த்தி

தம்புளையில் நிறுவப்பட்டுள்ள ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகத்தில் காணப்படும் பயிற்சி வசதிகளை இலங்கை இராணுவத்தினர் வழமையாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு இந்த கல்வியகத்தில் வழங்கப்படும் சேவை அளப்பரியதாக அமைந்துள்ளது. இதுவரையில், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பிரிவுகளில் பணியாற்றும் 53 இராணுவத்தினர் வதிவிட பயிற்சியை பெற்றுள்ளதுடன், இதில் 34 பேர் தேசிய தொழிற் தகைமையை (மேசன்) நிலை 3 இல் பூர்த்தி செய்துள்ளனர். ஏஞ்சிய

பிஸ்னஸ் டுடே சிறந்த 30 நிறுவனங்கள் தரப்படுத்தலில் கௌரவிப்பைப் பெற்ற ஒரே சீமெந்து கம்பனியாக டோக்கியோ சீமெந்து கம்பனி தெரிவு

பிஸ்னஸ் டுடே சிறந்த 30 நிறுவனங்கள் தரப்படுத்தலில் டோக்கியோ சீமெந்து குழுமமும் உள்வாங்கப்பட்டிருந்ததனூடாக இலங்கையின் நிர்மாணத்துறையில் தனது ஆதிக்கத்தை மேலும் உறுதி செய்துள்ளது. தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பெறுபேறுகள் நாட்டின் கூட்டாண்மைத் துறையில் கௌரவிக்கப்பட்டிருந்தது. துறையில் நிறுவனத்தின் வலிமையை உறுதி செய்யும் வகையில், இந்த ஆண்டின் தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்டிருந்த ஒரே சீமெந்து நிறுவனமாகவும் அமைந்துள்ளது. பிஸ்னஸ் டுடே தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன் போது டோக்கியோ சீமெந்துக்கான

கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தின் ‘கேள்வி நேரம்’ கருத்தரங்குகளின் பிரதான அனுசரணையாளராக டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தினால் மாதாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்கு நிகழ்வாக ‘கேள்வி நேரம்’ அமைந்துள்ளது. இதன் போது சங்கத்தின் நிபுணர்கள் மற்றும் மாணவ நிலையிலுள்ள அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து பொறியியல் மற்றும் நிர்மாணத்துறையில் காணப்படும் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடுவார்கள். இந்த கேள்வி நேரம் கருத்தரங்குத் தொடரின் பிரதான அனுசரணையாளராக டோக்கியோ சீமெந்து குழுமம் 2018 ஆம் ஆண்டு கைகோர்த்திருந்தது. இந்த நிபுணத்துவ பங்காண்மையின் ஒரு அங்கமாக, சம காலத்தில் காணப்படும் நிர்மாணத்