திருகோணமலை கடற்கரைகளை தூய்மையாக்கும் நடவடிக்கையில் டோக்கியோ சீமெந்து மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்த சகலருக்கும் நன்றி

டோக்கியோ சீமெந்து நிறுவனம் மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை திருகோணமலை மாவட்ட அலுவலகம் ஆகியன இணைந்து திருகோணமலை கடற்கரை பகுதிகளை சுத்திகரிக்கும் நடவடிக்கைகளில் கைகோர்த்திருந்த சகல தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளன. தேசிய கடற்கரை மற்றும் கடல்வள பாதுகாப்பு வாரம் 2017 செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இந்த திருகோணமலை கடற்கரைப்பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தன்னார்வ அடிப்படையில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் 20 ட்ரக்களில் குப்பைகளையும் கடற்கரையை அசுத்தப்படும் ஏனைய கழிவுகளையும் சேகரித்திருந்தனர். பாடசாலை

டோக்கியோ சீமெந்து மற்றும் பவுன்டேஷன் ஒஃவ் குட்நஸ் இணைந்து வடமாகாணத்தில் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் முன்னெடுப்பு

எமது நாட்டை ஒன்றிணைக்கும் விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் எவ்வாறு ஒன்றிணைந்து கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வத்தை காண்பிக்கின்றனர் என்பதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. வீதிகளில் ஆடியவண்ணம், தமது அணியினருக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். ஒரு கொடியின் கீழ், ஒரு அணிக்காக இவர்கள் ஒன்றுதிரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். மீண்டும் அந்த சிறந்த பொழுதுக்காக எமது முழு நாடுமே எதிர்பார்த்துள்ள ஒரு நிலையில் நாம் காணப்படுகிறோம். எமது கிரிக்கெட் ஆர்வத்தை

டோக்கியோ சீமெந்து கம்பனியில் தனது முதலீட்டை மேலும் அதிகாரித்துள்ள ஜப்பான் Ube இன்டஸ்ரீஸ்

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஆர். ஞானம், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தை வரவேற்றிருந்தார். Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அண்மையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பங்குகளில் 10 சதவீதத்தை கொள்வனவு செய்திருந்தது. இதன் மூலம் பொதுப்பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வரிசையில் முதல் 20 பங்காளர்கள் வரிசைக்கு உயர்த்தியிருந்தது. இலங்கைச் சந்தையில் டோக்கியோ சீமெந்து கொண்டுள்ள மூலோபாயத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக

திருகோணமலையில் டோக்கியோ சீமெந்து பயோமாஸ் வலு நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அங்குரார்ப்பணம்

திருகோணமலையில் நிறுவப்பட்ட டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் 2வது பயோமாஸ் வலு நிலையத்தை மே மாதம் 5ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குரார்;ப்பணம் செய்திருந்தார். நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் பிறந்த தின நினைவாக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இது அமைந்திருந்தது. இந்த நினைவு நிகழ்வுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், நிலாவெளி பகுதியில் அமைக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து சுனாமி வீடமைப்புத்திட்டத்தில்

டோக்கியோ சீமெந்தின் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த விநியோகஸ்த்தர்கள் கௌரவிப்பு

2016ல் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த விநியோகஸ்த்தர்கள் அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்த விநியோகஸ்த்தர் மாநாட்டின் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். 2016ம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தராக, யாழ்ப்பாணத்தின் சிட்டி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தை மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் விநியோகஸ்த்தர் பெற்றிருந்ததுடன், மூன்றாமிடத்தை மட்டக்களப்பு அகிலா ஹார்ட்வெயார் பெற்றிருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான டோக்கியோ சீமெந்தின் சிறந்த விநியோகஸ்த்தர்கள்

The Music Project திட்டத்துடன் கைகோர்த்துள்ள டோக்கியோ சீமெந்து

இசை ஊடாக சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டும் இலாப நோக்கற்ற செயற்திட்டமான The Music Project உடன் டோக்கியோ சீமெந்து கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பாடசாலைகள் மற்றும் குருநாகல், மாவத்தகமயைச் சேர்ந்த பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு தமது இசைக் கல்வியை மேம்படுத்திக்கொள்ள டோக்கியோ சீமெந்து அனுசரணை வழங்கும். முல்லைத்தீவின் யோகபுரம் மகாவித்தியாலயம், தேரன்கண்டல் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் 140 மாணவர்கள் மற்றும் குருநாகலின் குணாநந்த மகாவித்தியாலயத்தின் 50 மாணவர்கள் ஆகியோர் இந்த

சூழலுக்கு பாதுகாப்பான நிர்மாணத்தில் புரட்சி: TOKYO SUPER நீரியல் கலவைச் சீமெந்து அறிமுகம்

நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி, தனது புதிய சீமெந்து தயாரிப்பான TOKYO SUPER ஐ அறிமுகம் செய்துள்ளது. விசேடமாக வடிவமைக்கப்பட்ட நீரியல் கலவைச் சீமெந்து நிலக்கரிச் சாம்பலைக் கொண்டிருப்பதால் சிறந்த வலிமை மற்றும் நீண்டகால உறுதித்தன்மையை வழங்குகிறது. அத்துடன் 100 நாள் வலிமை பரிசோதனையின் போது உயர்ந்த வலிமையை வழங்கக்கூடிய தயாரிப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விசேட கலவையைக் கொண்ட இச்சீமெந்தானது காலம் செல்லச் செல்ல வலிமை அதிகரித்துச் செல்லும்

டோக்கியோ சீமெந்து விநியோகிஸ்தர் மாநாடு 2018 இல் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த சீமெந்து விநியோகிஸ்தர் மாநாட்டை அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இதன் போது சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகிஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் சிறந்த விநியோகிஸ்தருக்கான விருதை வென்றிருந்ததுடன், மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் டீலர்ஸ் இரண்டாமிடத்தையும், மட்டக்களப்பு அஹிலா ஹார்ட்வெயார் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தன. நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான சிறப்பாக செயலாற்றியிருந்த டோக்கியோ சீமெந்து விநியோகிஸ்தர்கள் கடந்த ஆண்டில்

டோக்கியோ சீமெந்து கருத்தரங்கில் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் ஜப்பானிய தொழில்நுட்பவியலாளர்கள் அறிவுப் பகிர்வு

டோக்கியோ சீமெந்து நிறுவனம் துறையின் முக்கிய பிரமுகர்களை இணைத்து அறிவுப் பகிர்வு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்குக்கு ‘கொ ங்கிறீற் இடல் தொழில்நுட்பத்தில் காணப்படும் புதிய போக்குகள்’ (‘New Trends in Concreting Technologies’) vd பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் UBE INDUSTRIES LTD இன் ஜப்பானிய சிறப்பு நிபுணர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு களுத்துறை அனந்தரா ரிசோர்ட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் புதிய துணை நிறுவனமான

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 25 குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்தினால் வீடுகள் அன்பளிப்பு

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வந்த 25 குடும்பங்களுக்கு நிலாவெளி, அடம்போடை பகுதியில் அமைந்துள்ள தனது சொந்தக்காணியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்வந்திருந்தது. திருகோணமலை பிரதேசத்தில் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த மக்களை மீள தமது சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த மாபெரும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டம் அமைந்திருந்தது. இந்த வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2017 மே மாதம் 5ஆம் திகதி